Friday 10 January 2014

வீரகேரளம்புதூர் நூலக வாசகர் வட்ட கூட்டம்

பதிவு செய்த நேரம்:2014-01-04 11:26:23
சுரண்டை,: வீரகேளம்புதூரில் கிளை நூலக வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வக்கீல் சுப்பையா தலைமை வகித்தார். நூலகர் வெற்றிவேலன் வரவேற்றார். வி.கே.புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராஜபாண்டி வேல்சாமி பாண்டியன் நூலக வாசகர் வட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தாயார்தோப்பு மெயின் ரோட்டில் நூலகத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கட்டிடம் கட்டவதற்கு அரசிடம் மனுக்கள் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. உறுப்பினர்கள் பழனிக்குமார், சிவராமகிருஷ்ணன், கருப்பசாமி, முத்துராமன், வெள்ளத்துரை மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர். நூலகர் திருமலை நம்பி நன்றி கூறினார். ஏற்பாடுகளை நூலகர் வெற்றிவேலன், நூலக பணியாளர் கைலாசம், சங்கீதா ஆகியோர் செய்திருந்தனர்.

Wednesday 1 January 2014