Saturday 29 November 2014

வீரகேரளம்புதூர் சவேரியார் ஆலய திருவிழா

பதிவு செய்த நேரம்:2014-11-27 10:53:34

வீரகேரளம்புதூர் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் மாலை யில் 2ம் தேதி வரை திருப்பலி, கூட்டுத்திருப்பலி, மறைக்கல்வி, அன்பியங்கள், நற் செய்தி தியானம் மற்றும் ஒப்புரவு வழிபாடு, விவிலியப் போட்டிகள் நற்கருணைப்பவனி நடக்கிறது.
டிச.2ம் தேதி இரவு 9 மணியளவில் புனிதரின் சப்பர பவனி நடக்கிறது. நிறைவு நாளான 3ம் தேதி திருவிழா திருப்பலி, புதுநன்மை, கொடியிறக்கம் நடைபெறுகிறது. விழாவில் தூத்துக்குடி மறை மாவட்ட சிப்பிக்குளம் ராஜா ரொட் ரிகோ, கோவில்பட்டி உதவி பங்குதந்தை, ஆரோக்கிய ராஜ், பாவூர்சத்திரம் ஆரோக்கியராஜ், சுரண்டை பங்குத்தந்தை வர்க்கீஸ் திருப்பலி நடத்துகிறார்கள். ஏற்பாடுகளை ஊர் தலை வர் சேசுராஜன், செயலாளர் மரியசுந்தரம், பொருளாளர் அருளானந்தம், உறுப்பினர் கள் ராயப்பன், ஞானசாமி அருள் சகோதரிகள் இறைமக்கள் செய்திருந்தனர்.

கடையநல்லூர் புதிய ஐடிஐயில் மாணவர் சேர்க்கை

நெல்லை, : கடையநல்லூரில் நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி, பேட்டை ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. பொருத்துனர், மின்பணியாளர், கம்பியர் மோட்டார் வண்டி, கம்பியாள், பற்றவைப்பவர் ஆகிய கல்விக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சிவிடி பாடத்திட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவருக் கும் இலவச சைக்கிள், லேப்டாப், சீருடை, பஸ் பாஸ் உள்ளிட்டவை மற்றும் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆகும். மேலும் விபரங்களுக்கு பேட்டை ஐடிஐ முதல்வரை 0462 2342005 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 5ம் தேதி ஆகும்

Sunday 9 November 2014

முட்டாளுடன் முந்த முடியுமா?

குறுநில மன்னர் ஒருவர், மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர். எப்போதும் புலவர்கள் புடைசூழவே இருப்பார். ஒருநாள் அவர் தனது ஆளுகையிலுள்ள வனப்பகுதிக்குப் பரிவாரங்களுடன் வேட்டைக்குச் சென்றார். அப்போது தனக்குப் பிரியமான புலவர் ஒருவரையும் உடன் அழைத்துச் சென்றார். சில மைல் தூரம் சென்றவுடன் "சற்று இளைப்பாறலாம்' என்று எண்ணிய மன்னர், ஓர் ஆலமரத்தின் நிழலில் அமர்ந்தார். உடன் வந்தவர்களும் மன்னரைச் சுற்றி ஆங்காங்கே அமர்ந்தனர். ஆனால், உடன் வந்த புலவரைக் காணவில்லை.

÷மன்னர், அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் ""புலவர் எங்கே?'' எனக் கேட்டார். மன்னரைச் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் திகைப்புடன் நோக்க, அங்கே புலவர் இல்லாத நிலையில், வந்த வழியை அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.

÷சற்று தூரத்தில் புலவர் நொண்டிக்கொண்டே வந்து கொண்டிருந்தார். புலவர் அருகில் வந்தவுடன், ""புலவரே ஏன் தாமதம், எங்களுடன் ஏன் வரவில்லை? ஒருவேளை எங்களை முந்திச் சென்றுவிட்டீர்களோ என நினைத்தேன்'' என்றார் மன்னர்.

÷புலவர் சற்றும் தயங்காமல் மன்னரை நோக்கி, ""அரசே முட்டாளுடன் முந்த முடியுமா?'' என்று பதில் கூறினார்.

÷புலவர் இவ்வாறு கூறியதைக் கேட்டவுடன் மன்னருடன் இருந்தவர்கள் அனைவரும், மன்னரைப் புலவர் "முட்டாள்' என்று கூறிவிட்டாரே எனத் திகைத்தனர். அப்போது புலவர் நிதானமாக, ""அரசே! வரும் வழியில் முட்கள் என் கால்களைப் பதம் பார்த்துவிட்டன. அம் முட்களை அகற்றி நடை தளர்ந்து நடந்துவரத் தாமதம் ஆகிவிட்டது. அதனால்தான் நான் உங்களுடன் சேர்ந்து வர இயலவில்லை. அப்படி இருக்கும்போது, முள்தாளுடன் முள்+தாள் - முள் தைத்த கால்களுடன் முந்த முடியுமா?) தங்களை நான் முந்த முடியுமா? எனப் புலவர் கூற, மன்னர் உட்பட அனைவரும் புலவரின் சாதுர்யத்தையும் கவித்துவத்தையும் ரசித்து இன்புற்றனர்.

÷இவ்வாறு கூறிய புலவர் "காவடிச்சிந்து' பாடிய சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார். இவர் 18-ஆம் நூற்றாண்டில் ஊத்துமலை என்னும் சிற்றூரைத் தலைமை இடமாகக்கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னரின் அவைக்களப் புலவராக இருந்து செந்தமிழ்க் கவிபாடி அவையை அலங்கரித்தவர்.