Friday 20 February 2015

நெல்லை மாவட்டத்தில் நவீன நில அளவை நிலையம் பிரபாகரன் எம்பி தகவல்

நெல்லை மாவட்டத்தில் 11 தாலுகாக்களில் நவீன நில அளவை மேலாண்மை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக பிரபாகரன் எம்பி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கலெக்டர் கருணாகரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பிரபாகரன் எம்பி பேசியதாவது: நெல்லை மாவட�டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 19 ஊராட்சி ஒன்றியங்களில் 425 கிராம பஞ்சாயத்துகளில் 3 லட்சத்து 52 ஆயி ரத்து 730 குடும்பங்களில் 5 லட்சத்து 62 ஆயிரத்து 431 பேர் பதிவு செய்யப்பட்டு வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.167 வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 63 பேர் பதிவு செய்து 76.98 லட்சம் மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.221 கோடி மதிப்பீட்டில் 36 ஆயிரத்து 289 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரத்து 214 பணிகள் முடிந்துள்ளன.
தேசிய ந�ல ஆவணங்கள் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 11 தாலுகா அலுவலகங்களில் நவீன நில அளவை மேலாண்மை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் பாளை, சங்கரன்கோவில், ராதாபுரம், வீ.கே.புதூர், ஆலங்குளம் ஆகிய 5 தாலுகாக்களில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நெல்லை, அம்பை, நாங்குநேரி, சிவகிரி, செங்கோட்டை, தென்காசி ஆகிய 6 தாலுகா அலுவலகங்களில் பணிகள் நடந்து வருகிறது. இவ�வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மேயர் புவனேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் விஜயகுமார், மகளிர் திட்ட அலுவலர் ஜெயக்குமார், கண்காண�ப்புக் குழு உறுப்பினர்கள் ஜோதி பரமச�வன், வெண்ணிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம், செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா, பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத் துரை, கவுன்சிலர் பரணி சங்கரலிங்கம், மானூர் யூனி யன் சேர்மன் கல்லூர் வேலாயுதம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பிரபாகரன் எம்பி தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில், மின் ஆளுமை திட்டத்தின் கீழ், 3ஆம் கட்டமாக திருநெல்வேலி, வீரகேரளம்புதூர், செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் இணையதளம் வழியே சான்றிதழ்கள் பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில், மின் ஆளுமை திட்டத்தின் கீழ், 3ஆம் கட்டமாக திருநெல்வேலி, வீரகேரளம்புதூர், செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் இணையதளம் வழியே சான்றிதழ்கள் பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதுதொடர்பாக, ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருநெல்வேலி மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் கீழ், வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் மக்கள் பல்வேறு சான்றிதழ்களை இணையதளம் வழியே பெறும் புதிய வசதியை முதல்கட்டமாக ராதாபுரம் வட்ட அலுவலகமும் இரண்டாம் கட்டமாக நான்குனேரி, அம்பாசமுத்திரம் வட்ட அலுவலகங்களும் அளித்துவருகின்றன. மூன்றாம் கட்டமாக வெள்ளிக்கிழமை முதல் (பிப். 20) திருநெல்வேலி, வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், சனிக்கிழமை முதல் (பிப். 21) செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும் இந்த வசதி செயல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, இந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் மக்கள் ஜாதி, வருமானம், நிரந்தர இருப்பிட, முதல் பட்டதாரி சான்றிதழ்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் சான்றிதழ் ஆகியவற்றுக்கு தங்களது கிராமத்துக்கு அருகேயுள்ள பொது சேவை மையம் மூலம் இணையதளம் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.

வட்ட அலுவலகங்களில் நேரிடையாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. இம்முறையில் இணையதளம் வழியே அனுப்பப்படும் விண்ணப்பங்கள் உரிய கிராம நிர்வாக அலுவலருக்கு இணையதளம் வழியே சென்றுவிடும். அவரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்கள் உரிய வருவாய் ஆய்வாளருக்கும் பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் இணையதளம் வழியாகவே சென்றுவிடும். ஏற்கப்பட்ட விண்ணப்பத்துக்கான சான்றிதழ்களை பொதுமக்கள் விண்ணப்பித்த பொதுசேவை மையம் மூலம் எளிதில் பெறலாம்.

மேலும், திருநெல்வேலி, வீரகேரளம்புதூர், செங்கோட்டை வட்டத்துக்குள்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களான மானூர், பாளையங்கோட்டை, ஆலங்குளம், தென்காசி, கீழப்பாவூர், செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சமூக நலத்துறையின் சார்பிலான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழையர் விதவை மகள் திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் மற்றும் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் போன்ற நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்களையும் பொதுசேவை மையங்களில் இணையதளம் வழியே பதிவுசெய்தால் போதும். இதன் மூலம் மக்கள் அரசு அலுவலகங்களுக்கு வீணாக அலைவதையும், காலவிரயத்தையும் தவிர்க்கலாம்.

எனவே, திருநெல்வேலி, வீரகேரளம்புதூர், செங்கோட்டை வட்ட அலுவலகங்களுக்கு உள்பட்ட கிராம பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவ