Friday, 29 August 2014

தண்ணீர் என நினைத்து பூச்சிமருந்தை குடித்த காவலாளி சாவு

சுரண்டை, ஆக. 28–

ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு பூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முப்பிடாதிமுத்து (வயது 58). இவர் வீரகேரளம்புதூர் பகுதியில் உள்ள பல்லாரி தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர் தோட்டத்தில் படுத்து இருக்கும்போது தண்ணீர் தாகம் எடுத்தது. அப்போது அங்கு பாட்டிலில் பல்லாரிக்கு அடிக்கும் பூச்சி மருந்து இருந்துள்ளது. அதை தண்ணீர் என்று நினைத்து முப்பிடாதிமுத்து குடித்து விட்டார்.

பாதி அளவு குடித்த பிறகுதான், அது தண்ணீர் அல்ல என்று அவருக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் அருகில் உள்ளவர்களிடம் கூறினார். அவர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று முப்பிடாதிமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Friday, 1 August 2014

கலந்தாய்வு மூலம் நிரப்பப்படாத இடங்கள்: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை இன்று தொடங்குகிறது

நெல்லை,

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படாத இடங்கள் நேரடி மாணவர் சேர்க்கை மூலம் நிரப்பப்படுகிறது. நேரடி சேர்க்கை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

தொழிற்பயிற்சி நிலையங்கள்
நெல்லை பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், ஐ.டி.ஐ. படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்றது. அதாவது, பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி, ராதாபுரம் ஆகிய 5 ஊர்களில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும், 21 தனியார் தொழிற்பயிற்சி மையங்களுக்கும் இந்த கலந்தாய்வு நடந்தது.

மொத்தம் 26 தொழிற்பயிற்சி நிலையங்களிலும் உள்ள 1,587 இடங்களுக்கு, 2853 பேர் விண்ணப்பம் அனுப்பி இருந்தார்கள். அவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். மதிப்பெண்கள், இன சுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றதில் 1,406 இடங்கள் நிரபப்பட்டன.

நேரடி சேர்க்கை
மீதம் உள்ள 181 இடங்களுக்கு மாணவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நேரடி சேர்க்கை மூலம் நிரப்பப்படுகிறார்கள். மேலும் ஏற்கனவே தொழிற்பயிற்சியில் சேர்க்கப்பட்டவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

காலியாக இருக்கும் கம்பியாளர், வெல்டர், பிளம்பர் பயிற்சி பிரிவுகளுக்கு 8–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், பொருத்துனர், கடைசலர், இயந்திர வேலையாள், மோட்டார் மெக்கானிக், திறன்மிகு மையம் (எலக்ட்ரிக்கல்), கம்மியர் டீசல், ஏ.சி. மெக்கானிக், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், திட்டமிடுதல் (கோபா) போன்ற பயிற்சியில் சேர 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்கள், பெண்கள் தகுதி உடையவர்கள் ஆவர்.

ஒவ்வொரு தொழிற்பயிற்சி நிலையத்திலும் சில பிரிவுகளில் சில இடங்கள் காலியாக உள்ளன. மேற்படி காலி இட விவரங்கள் அனைத்து அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களிலும் விளம்பர பலகையில் ஒட்டப்பட்டு இருக்கிறது.

பயிற்சியில் சேர விரும்புவோருக்கு வயது 14 முதல் 45 வரை இருக்கலாம். நேரடியாக பெற்றோருடன் சம்பந்தப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு சென்று ரூ.50 செலுத்தி விண்ணப்பம் பெற்று, பூர்த்தி செய்து பயிற்சியில் சேரலாம். மாற்றுச்சான்று, மதிப்பெண் பட்டியல், சாதி, வருமானம் ஆகியவற்றின் அசல் சான்றுகளை கொண்டு செல்ல வேண்டும். மார்பளவு புகைப்படம்–4, சேர்க்கைக்கான அரசு கட்டணத்தையும் கொண்டு வரவும்.

கட்டணம் கிடையாது
பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் விடுதி வசதியும், வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உணவுடன் கூடிய இலவச விடுதியும் உள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம் கிடைக்காத நிலையில், தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில் கலந்தாய்வு மூலம் சேர்ந்து பயன் பெறலாம். கலந்தாய்வு மூலம் சேரும் ஆண்கள், பெண்களுக்கு தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

மேலும் விவரங்களை நெல்லை மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலக தொலைபேசி எண்–0462–2501251, பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 0462–2342005 என்ற எண்ணிலும், வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 04633–277962 என்ற எண்ணிலும், அம்பை அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 04634–251108, தென்காசி தொழிற்பயிற்சி நிலையத்துக்கு 04633–280933 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு அறியலாம்.

இந்த தகவலை பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் ஒருங்கிணைந்த முதல்வர் எஸ்.முத்துசாமி, ராதாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எம்.ஆர்.அப்துல்காதர் ஆகியோர் தெரிவித்தனர்.

Wednesday, 23 July 2014

கலிங்கப்பட்டி நாராயண சுவாமி பொன்பதி திருவிழா 11 நாட்கள் நடக்கிறது

பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜூலை 23, 2:50

சுரண்டை அருகே உள்ள கலிங்கப்பட்டி ஸ்ரீமன் நாராயணசுவாமி பொன்பதியில் 35–வது ஆண்டு திருவிழா கடந்த (18–ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. கொடியினை சுரண்டை பேரூராட்சி மன்ற தலைவர் பழனி நாடார் ஏற்றினார்.

வீரகேரளம்புதூர் ஊராட்சி தலைவர் மருதப் பாண்டியன் (எ) பாபுராஜா திருஏடு வாசிப்பும், பால்தர்மம் நடக்கிறது. 8–ம் திருவிழா அன்று 25–ந்தேதி வெள்ளி பகல் 1 மணிக்கு அன்னதர்மமும் அய்யா கருட வாகனத்தில் பவனி வருதலும் நடக்கிறது.

நிறைவு நாளான வருகிற 28–ந்தேதி இரவு 12 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதலுடன் நிறைவு பெறுகிறது.

Sunday, 13 July 2014

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய திட்டத்தின்படி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 14) தொடங்கி ஜூலை 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய திட்டத்தின்படி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 14) தொடங்கி ஜூலை 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பாசமுத்திரம், தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர் ச. முத்துசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தின் மூலம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீதம் இடங்களை அரசு ஒதுக்கீட்டின் கீழ், அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு இலவச பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களின் பயிற்சி செலவை அரசே ஏற்று தனியார் பயிற்சி நிலையங்களுக்கு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

கலந்தாய்வு தொடக்கம்: அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் 21 வரை கலந்தாய்வு நடத்தி மதிப்பெண் தகுதி அடிப்படையிலும், இனவாரி அடிப்படையிலும் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து, அவரவர் விருப்பப்படி அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கான சேர்க்கை ஆணை வழங்கப்படும். இக் கலந்தாய்வில் 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 21 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் பங்கேற்கின்றன.

திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறும் கலந்தாய்வுக்கு 8, 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 195 மாணவர், மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் எஸ்.டி. முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர், பெண்களுக்கான இன ஒதுக்கீடுகளுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வுக்கு 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு 2814 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வில் மாணவர்கள் மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, சாதி மற்றும் வருமானச் சான்று, அரசு சேர்க்கைக் கட்டணம் ஆகியவற்றுடன் நேரில் பெற்றோர்களுடன் பங்கேற்க வேண்டும்.

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் விடுதி வசதியும், வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உணவுடன் கூடிய இலவச விடுதியும் உள்ளது. பேட்டையில் மோட்டார் மெக்கானிக் பிரிவு மாணவர்களுக்கு 4 சக்கர வாகன பயிற்சியும், வீரகேரளம்புதூரில் 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டுநர் உரிமமும் பெற்றுத் தரப்படும். கம்பியாள், மின்சாரப் பணியாளர் பிரிவு மாணவர்களுக்கு பி- உரிமம் பெற்று வழங்கப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், மடிக்கணினி, சைக்கிள், சீருடை, ஷூ, மாதாந்திர உதவித் தொகை ரூ. 500 ம், பேருந்து, ரயில் பயணக் கட்டணச் சலுகை போன்றவை வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 27 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் உள்ளன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இடம் கிடைக்காத மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து இலவச பயிற்சி பெறலாம்.

மேலும் விவரங்களை அறிய திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் 0462- 2501251, பேட்டை நிலையத் தொலைபேசி எண் 0462 - 2342005, அம்பாசமுத்திரம் நிலையத் தொலைபேசி எண் 04634 - 251108, வீரகேரளம்புதூர் நிலையத் தொலைபேசி எண் 04633 - 277962, தென்காசி நிலையத் தொலைபேசி எண் 04633 - 280933 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

Wednesday, 9 July 2014

Veerakeralampudur Pincode- 627861 details


Step 1 : Select State* :Tamilnadu
Step 2 : Select District :Tirunelveli
Step 3 : Select Taluk/Taluka/Tahasil :Veerakeralampudur
Step 4 : Select City :Veerakeralampudur

Pincode : 627861
City/Town Name : Virakeralmpudur
Delivery Status: Delivery
Office Type: S.O
Division Name : Kovilpatti
Region Name : Madurai
Taluk : Veerakeralampudur
Circle Name : Tamilnadu
District Name : Tirunelveli
State Name : TAMIL NADU


Breakdown of Pincode Digits :

627861, Veerakeralampudur, TAMIL NADU, India.



6 2 7 8 6 1


Virakeralmpudur has a pincode 627861. Virakeralmpudur belongs to Veerakeralampudur Taluk (taluka) of Tirunelveli District. Virakeralmpudur belongs to Madurai region of State TAMIL NADU and has Division name Kovilpatti and circle name Tamilnadu.

PIN Code also known as Post Code, Postal Code or ZIP Code is a series of numeric digits that are assigned to geographical areas and are used for mailing purpose (especially for sorting purpose)




1st Digit : Sub-Region

The 1st digit 6 of pincode 627861 signifies that it belongs to Northern India (States that belong to Southern India, Region 6 are Kerala and Tamil Nadu). India is being divided into 9 PIN regions. The first eight regions are the geographical regions where as the 9th is reserved for the Indian Army Postal Service.



2nd Digit : Sub-Region


The Geographical Reigion digit (1st digit) plus the Second Digit i.e. 62 of the PIN Code 627861 represents the Sub Region or the Postal Circles which it belogs : i.e. TAMIL NADU.
3rd Digit : Sorting/Revenue District

The 1st,2nd and the 3rd digits all together i.e. : 627 represents the sorting or the revenue district of.

627 code belongs to division Kovilpatti in Madurai region in TAMIL NADU.
Last 3 digit : Post Office

The last three digits 861 are assigned to to individual postal offices.



VIRAKERALMPUDUR 627861 Geo-loation co-ordinates : Latitude : 8.6854000 , Longitude : 77.6146000


VIRAKERALMPUDUR, 627861 : 14-Day Weather forecast


Tuesday, 8 July 2014

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சக மாணவரின் உயிரைக் காக்க களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயர் சிகிச்சை பெற்று வரும் மாணவரின் உயிரைக் காக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சுரண்டை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மனு அளித்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயர் சிகிச்சை பெற்று வரும் மாணவரின் உயிரைக் காக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சுரண்டை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், ராஜபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பி. சொக்கலிங்கபாண்டியன் (19). இவர் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்கு போதிய நிதி இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினர் தவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு நிதியுதவி அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி அக்கல்லூரியில் பயிலும் சக மாணவர், மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர், திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

Thursday, 3 July 2014

சாலையோர ஆக்கிரமிப்பு, குறுகிய பாலத்தால் வீ.கே.புதூரில் போக்குவரத்து நெருக்கடி

பதிவு செய்த நேரம்:2014-07-01 11:26:06

சுரண்டை, : வீ.கே.புதூரில் சாலையோர ஆக்கிரமிப்பு மற்றும் குறுகிய பாலத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் பழைய தாலுகா அலுவலகம் மேல்புறம் மாறாந்தை கால்வாய் செல்கிறது. இந்த காலல்வாயில் உள்ள குறுகிய பாலம் கட்டப்பட்டு சுமார் 80 வருடங்களுக்கு மேல்ஆகிறது. சுரண்டையிலிருந்து வீ.கே.புதூர் வழியாக நெல்லை செல்லும் அனைத்து பஸ்சுகளும் இந்த பாலத்தை கடந்து தான் செல்கின்றன. ஆலங்குளம், கழுநீர்குளம் பகுதி பொதுமக்கள் சுரண்டைக்கு வரும் பொதுமக்கள் இந்த பாலத்தை கடந்து தான் வரவேண்டிய அவல நிலை உள்ளது.
மழைக்காலங்களில் கால்வாயில் வெள்ளம் வரும் போது பாலத்தின் மேல்பகுதியில் செல்லும், அப்போது போக்குவரத்து தடைப்படுகிறது. பாலத்தில் எதிரே, எதிரே பஸ்கள் வந்தால் விலக முடியாமல் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிக அதிர்வு ஏற்படுகிறது. பாலம் வெடிப்பு ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாலத்தை கடப்பதால் போக்குவரத்து பாதிப்பு எற்படுகிறது.
எனவே குறுகிய பாலத்தை விரிவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாஸ்மாக் கடை
அகற்றப்படுமா?
பாலத்திலிருந்து வடக்கு பழைய பஸ்-ஸ்டாப் வரையிலான இருபுறம் பலசரக்குகடைகள், டீ கடை, ஹோட்டல் வைத்திருப்பவர்கள் கடை முன்பு கூரைசாய்ப்பு வைத்தும், மரப்பெட்டிகள், சிமெண்ட் திண்ணைகள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர்.
மேலும் அருகில் டாஸ்மாக் கடை இருப்பதால் குடிமகன்கள் நடுரோட்டில் செல்வதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகள் மற்றும் டாஸ்மாக் கடையை அகற்றினால் ஓரளவு போக்குவரத்து சீராகும்.

Wednesday, 25 June 2014

"மழைக் காலங்களில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு உதவித்தொகை'



First Published : 25 June 2014 02:58 AM IST
மழைக் காலங்களில் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவித்தொகையாக தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் தகுதியான பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக ஆட்சியர் மு.கருணாகரன் தெரிவித்தார்.

மண்பாண்டத் தொழிலாளர்கள் மழைக்காலங்களில் தொழில் நடத்துவது மிகவும் கடினம். இதனால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, அவர்களுக்கு மழைக் காலங்களில் மட்டும் உதவித்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உதவித்தொகைக்கான தகுதியான பயனாளிகளை தேர்வு செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் மு.கருணாகரன் பேசியதாவது: மழைக் காலங்களில் மண்பாண்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 2014-15ஆம் ஆண்டுக்கு உதவித்தொகை வழங்குவதற்காக தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடைபெறவுள்ளது.

மண்பாண்டத் தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்த நபர்கள் மற்றும் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கூட்டுறவுச் சங்கத்தில் பதிவு செய்த உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது இம்மாதம் 26ஆம் தேதி முதல் ஜூலை 10 ஆம் தேதி வரை கள ஆய்வு நடத்தப்படும்.

ஆலங்குளம்,அம்பாசமுத்திரம்,நான்குனேரி,தென்காசி,பாளையங்கோட்டை, ராதாபுரம், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, திருநெல்வேலி, வீரகேரளம்புதூர் ஆகிய 11 வட்டங்களிலும் அந்தந்தப் பகுதி வருவாய்த்துறை, தொழிலாளர் நலத்துறை, கதர்கிராமத் தொழில் வாரிய அலுவலர்கள் இணைந்து ஆய்வு செய்வர்.

ஒவ்வொரு குடும்பமாக கணக்கிடப்பட்டு தகுதியான அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

மண்பாண்டம் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் அனைவரும் கணக்கெடுப்பில் தங்களது பெயர் விடுபடாமல் முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும். கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் அலுவலர்களும் யாரையும் விடுபடாமல் முழுமையாக கணக்கெடுக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

இக்கூட்டத்தில், கதர் கிராமத் தொழில் வாரிய உதவி இயக்குநர் ராமசுப்பிரமணியன், கோட்டாட்சியர் ரமேஷ், சமூகப் பாதுகாப்பு திட்ட தொழிலாளர் அலுவலர் தமிழ்செல்வி, தொழிலாளர் ஆய்வாளர் லிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Saturday, 21 June 2014

ஊராட்சித் தலைவி கணவர் மீது தாக்குதல்

• Last Updated: Jun 19, 2014 12:40 AM
வீரகேரளம்புதூர் அருகே திருமண வீட்டுக்கு குடிநீர் வழங்கும் பிரச்னையில் ஊராட்சித் தலைவியின் கணவர் தாக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து பதற்றம் நிலவியது.
இதையடுத்து போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டது. வீரகேரளம்புதூர் அருகேயுள்ள கழுநீர்க்குளம் ஊராட்சித் தலைவர் சண்முகத்தாய். இவரது கணவர் ஆண்டபெருமாள். செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் திருமண வீடு ஒன்றுக்கு ஊராட்சி குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடிப்பது தொடர்பான பிரச்னையில் ஆண்டபெருமாள் தாக்கப்பட்டதாக தகவல் பரவியது. ஏற்கெனவே இருதரப்பினரிடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வரும் நிலையில் இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து புதன்கிழமை காலையில் சுரண்டை ஆய்வாளர் டேவிட் ரவிராஜன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் ஆலங்குளம் டி.எஸ்.பி.பிச்சை தலைமையில் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக தீர்வு ஏற்படவே பதற்றம் தணிந்தது. அங்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வி.கே.புதூர் சாலையில் ஆக்கிரமிப்புகள்

பதிவு செய்த நேரம்:2014-06-18 11:59:10

நெல்லை, : ஆலங்குளம் ஒன்றிய விவசாய அணி செயலாளர் காளி சாமி மற்றும் பாஜ பிரமுகர் சொர்ணராஜ் தலைமையில் விவசாயிகள் கலெக்டரிடம் அளித்த மனு:
வீரகேரளம்புதூர்- சண்முகநல்லூர் சாலையில் எங்கள் கிராமமான கீழ வீராணம் உள்ளது. இச்சாலையில் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளதால் போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. தற்போது பள்ளி வாகனங் கள் அதிகரித்துள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ஒரு வாகனம் இச்சாலையில் வந்தால், எதிரே வரும் வாகனங்கள் சுமார் 300 அடி பின்னோக்கி வந்தே விலக முடியும் என்ற நிலை காணப்படுகிறது. எனவே இச்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். இச்சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, செப் பனிட முன்வரவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க விண்ணப்பிக்கலாம் 30–ந் தேதி கடைசி நாள்

புதன், ஜூன் 18,2014, 10:04 AM IST

நெல்லை,
பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க 30–ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு முதல்வர் எஸ்.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
தொழிற்பயிற்சி
பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், பொருத்துனர், கடைசலர், இயந்திர வேலையாள், கம்பியாள், கம்மியர் மோட்டார் வண்டி, கம்மியர் வானொலி மற்றும் தொலைக்காட்சி, பற்றவைப்பவர், திறன்மிகுமையம் (எலக்ட்ரிக்கல்) போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வீரகேரளம்புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், பொருத்துனர், மின்சாரப்பணியாளர், கம்பியாள், பம்ப் மெக்கானிக் போன்ற பிரிவுகளும், அம்பை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர், மின்சாரப்பணியாளர், கம்பியர் மின் அணுவியல் பிரிவுகளும், தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர், மின்சாரப்பணியாளர், கம்பியாள் போன்ற தொழிற்பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்ற அனைத்து மாணவ– மாணவிகளுக்கும் வளாக தேர்வு மூலம் வேலைவாய்ப்பு வழங்குவதுடன், மின்சார பணியாள், கம்பியாள் போன்ற தொழிற்பிரிவு மாணவ– மாணவிகளுக்கும் ‘பி‘ லைசென்ஸ் பெற்று தரப்படுகிறது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று வரும் மாணவ– மாணவிகளுக்கு இலவச லேப்– டாப், சைக்கிள், சீருடை, ஷூ, மாதம் ரூ.500 ஊக்கத்தொகை, பஸ் பாஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி
பொருத்துனர், கடைசலர், இயந்திர வேலையாள், மெக்கானிக் மோட்டார் வண்டி, கம்பியர் வானொலி மற்றும் தொலைக்காட்சி, திறன்மிகு மையம் (எலக்ட்ரிக்கல்), பம்ப் மெக்கானிக் மற்றும் கம்பியர் மின் அணுவியல் போன்ற தொழிற் பிரிவுகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவ– மாணவிகள் சேரலாம். கம்பியாள் வெல்டர் போன்ற பிரிவுகளில் சேர 8–ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10–ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் சேரலாம். இருபாலரும் தகுதியுடையவர்கள்.
கம்பியர் மோட்டார் வண்டி தொழிற் பிரிவில் சேர்ந்த ஆண், பெண் பயிற்சியாளர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வீரகேரளம்புதூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் அனைத்து மாணவ– மாணவிகளுக்கும் ஓட்டுனர் பயிற்சி கொடுத்து 2 மற்றும் 4 சக்கர வாகன உரிமம் (லைட்) சான்றிதழ் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இயங்கி வரும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதியும், வீரகேரளம்புதூர் அரசினர் தொழிற்பியிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு அரசு விடுதியில் உணவு வசதியுடன், இலவச தங்கும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி விண்ணப்பமும், விளக்க உறையும் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். வருகிற 30–ந் தேதி கடைசி நாளாகும். மதிப்பெண் அடிப்படையிலும், இன சுழற்சி மூலமாகவும் மாணவ– மாணவிகள் சேர்க்கை தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
குறைந்தபட்ச கல்வி தகுதியுடன் 14 வயது பூர்த்தி செய்த மாணவ– மாணவிகள், 40 வயது வரை உள்ளவர்கள் சேர்க்கைக்கு தகுதி உடையவர்கள்.
வளாக தேர்வு
பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை மற்றும் தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று மாணவ– மாணவிகளுக்கும் வளாக தேர்வு மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது. பலர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று உள்ளனர். மேற்கண்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பம் பெற்று சேர்ந்து பயனடையலாம்.
விவரங்களுக்கு
பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில் 0462 2342005 என்ற தொலைபேசி எண்ணிலும், வீரகேரளம்புதூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 04633 277962 என்ற தொலைபேசி எண்ணிலும், அம்பை தொழிற்பயிற்சி நிலையத்தில் 04634 251108 என்ற தொலைபேசி எண்ணிலும், தென்காசி தொழிற்பயிற்சி நிலையத்தில் 04633 280933 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு நெல்லை, மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகம் 0462 2501251, 2501261 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாலை நேர இலவச பயிற்சிகள் திறன் மேம்பாட்டுக்காக பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை, பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் ஒருங்கிணைந்த முதல்வர் எஸ்.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.

Sunday, 15 June 2014

வீ.கே.புதூரில் தி.மு.க. பொதுக்கூட்டம்

பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூன் 14, 2:37 PM IST

கீழப்பாவூர் ஒன்றிய திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வீ.கே.புதூரில் நடந்தது. சேக் மைதீன் தலைமை வகித்தார்.

நகர செயலாளர் மாரியப்பன் வரவேற்றார். பரசுராமன் தொகுத்து வழங்கினார். மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி, மாநில பேச்சாளர் நெல்லை பா.ரா, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் ஆகியோர் பேசினர்.

பாவூர் நாவலர், ராமச்சந்திரன், அன்பழகன், ஆண்டபெருமாள், தர்மர், வைத்தீஸ்வரி, சக்தி, ராசாத்தி. அருணாப்பேரி திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுப்பிரமணியன், ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் மகேந்திரன் ஆகியோர் நன்றி கூறினர்.

Sunday, 1 June 2014

பேட்டை ஐ.டி.ஐ.யில் முப்பெரும் விழா

: May 30, 2014 5:26 AM
பேட்டையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) முப்பெரும் விழா நடைபெற்றது.

பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துநர், கடைசலர், இயந்திரவேலையாள் ஆகிய 8 தொழிற்பிரிவுகளில் மாணவர்-மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள தொடர் அறிவுரை மையத்தில் 98 ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான தேர்வில் மோட்டார் மெக்கானிக் பிரிவு மாணவர் எஸ்.மணிகண்டன் முதல் இடத்திலும், 99 ஆம் ஆண்டு தேர்வில் கம்பியாளர் பிரிவு மாணவி சி.பாரதி முதலிடமும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது.

இதேபோல வீ.கே.புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் கம்பியாள் பிரிவு மாணவி எஸ்.பேச்சியம்மாள், மாநில அளவிலான திறனாய்வுப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். இவருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர வளாகத் தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்-மாணவிகளுக்கு பணிநியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.

இதற்கான முப்பெரும் விழாவுக்கு, பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.முத்துசாமி தலைமை வகித்தார். பயிற்சி அலுவலர் என்.ரமீசாபானு வரவேற்றார். திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநர் டி.ஜான் பாஸ்கோ முன்னிலை வகித்தார். நிர்வாக அலுவலர் ஆ.வள்ளியம்மாள் பாராட்டிப் பேசினார். பயிற்சி அலுவலர்கள் சத்யராஜ், லட்சுமணன், ஜெயச்சந்திரன், முத்தையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Saturday, 10 May 2014

வீரகேரளம்புதூர் புனித அந்தோணியார் பெண்கள் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

பதிவு செய்த நேரம்:2014-05-10 11:19:37

வீரகேரளம்புதூர் புனித அந்தோணி யார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 134 மாணவிகள் பிளஸ்2 தேர்வு எழுதியினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். மாணவி விக்னேஸ்வரி 1163 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவி கலை வாணி 1140 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தையும், மாணவி ரோஜா பர்வீன் 1136 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பெற்றனர். முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவி களை பள்ளி நிர்வாகி மேரிடெய்சி ராஜம்மாள், தலைமை ஆசிரியை காளியம்மாள் மற்றும் ஆசிரியர் கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Friday, 9 May 2014

கோடை மழையால் 8 ஆண்டுகளுக்கு பிறகு சிற்றாற்றில் அணை கடந்து வெள்ளம் புரண்டது

பதிவு செய்த நேரம்:2014-05-09 11:49:36
நெல்லை, : நெல்லை மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு வெளுத்து வாங்கிய கோடை மழை யால் சிற்றாற்றில் அணை களை கடந்து வெள்ளம் புரள்கிறது. குளங்கள் நிரம்பி வருகின்றன. விவசாயிகள் சாகுபடிக்கு தயாராகி விட்டனர்.
குற்றாலத்தில் உருவா கும் சிற்றாறு சுரண்டை புளியரை அணையை கடந்து வீராணம் வருகிறது. அதன்பின் அனுமன்நதியோடு கலந்து கங்கைகொண்டான், சீவலப்பேரி வரை வந்து தாமிரபரணி யில் சங்கமிக்கிறது.
குற்றாலம் தாண்டி தென்காசி, வீகே.புதூர், சுரண்டை பகுதி வரை அணைகள், குளங்கள் அதி கம் என்பதால் சுரண்டை யை கடந்து தண்ணீர் வருவது கடந்த காலத்தில் குறைந்து விட்டது. குறிப் பாக வீராணம் அணையை உயர்த்தியபிறகு தண்ணீர் வடிவதே கடினமானது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான புயலால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்வதால் இப்பகுதியில் தண்ணீர் ஓடுகிறது. வீ.கே.புதூர், பைம்பொழில், அச்சன்புதூர், சுரண்டை வரை பல்லாரி சாகுபடி பெருமளவில் நடப்பதால் புளியரை அணையின் ஷட் டர் திறக்கப்பட்டு தண்ணீர் சிற்றாற்றை சார்ந்த குளங்களுக்கு செல்கிறது. வீரா ணம் கடந்து ஆற்றிலும் தண்ணீர் புரண்டோடுகிறது.
ஆயிரக்கணக்கான விவசாயிகள் நம்பியிருக்கும் மானூர் பெரியகுளத்திலும் கொஞ்சம் நீர் பெருகியுள் ளது. இக்குளத்துக்கு முன் புள்ள தெற்குப்பட் டியை சேர்ந்த 2குளங்கள், ஐயர் குளம், ஐயனார்குளம், மடத் தூர் குளங்கள் பெருகி வருகின்றன. இதேநிலை இன் னும் சில நாட்கள் நீடித்தால் மானூர் குளமும் ஓரளவு நிரம்பிவிடும்.
இதுகுறித்து மானூர் பெரியகுளம் விவசாயி முகமது இப்ராகிம் கூறுகை யில், ‘துத்திக்குளம், மாயமான்குறிச்சி, ஐயனார்குளம், மடத்துக்குளங்கள் நிரம்பி வருவதால் எங்கள் குளத்துக்கு நீர் வரத்து உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் தாயார்தோப்புக்கு கிழக்கே தண்ணீர் வருவதே இந்த கோடையில்தான். இன்னும் சில நாட்கள் மழை இருந்தால் சிற்றாற்றை தழுவியுள்ள 28 குளங்களும் நிரம்பிவிடும். விவசாயிகள் பருத்தி, நெல், கத்தரி என ஏதாவது ஒரு பயிரை சாகுபடி செய்யத் தொடங்கி விடுவர்.’ என்றார்.
மேல பிள்ளையார்குளம் விவசாயி சுடலை கூறுகையில், ‘கோடை மழை இன்னும் இரு நாட்கள் பெய்தால் மேல, கீழ பிள்ளையார்குளங்கள் முழுமையாக நிரம்பிவிடும். நாங்கள் விவசாயத்துக்கு தயாராகிவிட்டோம். கையிலிருந்த கொஞ்ச காசையும் கோடையில் கால்நடைகளை காப்பாற்ற செலவழித்து விட்டோம்’ என்றார்.
சபாஷ் சத்தியநாதன் மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் வர அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சத்தியநாதனும் ஒரு காரணம் என்றனர் விவசாயிகள். தாயார்தோப்பிலிருந்து மானூர் குளம் வரை சுமார் 30 கி.மீ. கால்வாயை இவர் சத்தமின்றி செப்பனிட்டுள்ளார். இன்னும் சுமார் 6 கி.மீ. தூரமே இப்பணி பாக்கி உள்ளது.

Tuesday, 25 March 2014

வீ.கே.புதூரில் மின்வாரிய ஊழியரை மிரட்டியவர் மீது வழக்கு

பதிவு செய்த நேரம்:2014-03-25 10:30:32
சுரண்டை, : வீ.கே.புதூர் மின்வாரியத்தில் பெண் உதவியாளரை மிரட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சுரண்டை அருகே வீ.கே.புதூரை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் பரசுராமன்(52). வீகேபுதூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவர் வீகேபுதூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு பணியில் இருந்த உதவியாளர் கழுநீர்குளத்தை சேர்ந்த மாரிச்சாமி மனைவி முருகேஸ்வரி(32) என்பவரிடம், புதிய மின் இணைப்பு பெறுவதற்கான விவரங்களை கேட்டுள்ளார். அதற்கு அவர், அதிகாரி இல்லை. எனக்கு அதுபற்றிய விவரம் தெரியாது என்று கூறியுள்ளார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பரசுராமன், முருகேஸ்வரியை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக வீ.கே.புதூர் போலீசார் பரசுராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Sunday, 16 March 2014

Anna Boys Higher Secondary School

                                             Anna Boys Higher Secondary School



Affiliation :
Funding : Self Financing
Level : Senior Secondary Stage
Accreditation : TNSB
Estd. Year :
Gender : Boys

Anna Boys Hr. sec School is one of the good institutes of Tamil Nadu.

It is situated in Veerakeralampudur city of Tamil Nadu.

Overview

Anna Boys Higher Secondary School level of Senior Secondary Stage is funded by the Self Financing Veerakeralampudur, Tamilnadu. This School was accredited by Tamil Nadu State Board. The group of visionaries and intellectuals to impart education in a stimulating and innovative environment where students are empowered with knowledge and professional skills while upholding the values of integrity, tolerance and mutual respect. It is among the prominent colleges of its field in the state.

Anna Boys Higher Secondary School the ambiance provided by the school facilitates quality learning. Anna Boys Higher Secondary School aims to produce technical and management professionals of global standards. The school mission is to develop well qualified, globally accepted, world class technically sound professionals, innovative research ideas with social commitments and highest ethical values as inner strength, for the upliftment of man kind, trained through high profiled experienced faculty, career oriented classes and interactive teaching-learning process.

Classes Offered
Class I
Class II
Class III
Class IV
Class V
Class VI
Class VII
Class VIII
Class IX
Class X
Class XI
Class XII

Facilities Avialable
Library
Laboratories
Playground
Seminar Room

Location
Anna Boys Higher Secondary School
Mainroad, Near by Policestation
Veerakeralampudur
Tirunelveli, Tamilnadu
INDIA - 627861




Friday, 10 January 2014

வீரகேரளம்புதூர் நூலக வாசகர் வட்ட கூட்டம்

பதிவு செய்த நேரம்:2014-01-04 11:26:23
சுரண்டை,: வீரகேளம்புதூரில் கிளை நூலக வாசகர் வட்ட கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வக்கீல் சுப்பையா தலைமை வகித்தார். நூலகர் வெற்றிவேலன் வரவேற்றார். வி.கே.புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராஜபாண்டி வேல்சாமி பாண்டியன் நூலக வாசகர் வட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தாயார்தோப்பு மெயின் ரோட்டில் நூலகத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் கட்டிடம் கட்டவதற்கு அரசிடம் மனுக்கள் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. உறுப்பினர்கள் பழனிக்குமார், சிவராமகிருஷ்ணன், கருப்பசாமி, முத்துராமன், வெள்ளத்துரை மற்றும் வாசகர்கள் கலந்து கொண்டனர். நூலகர் திருமலை நம்பி நன்றி கூறினார். ஏற்பாடுகளை நூலகர் வெற்றிவேலன், நூலக பணியாளர் கைலாசம், சங்கீதா ஆகியோர் செய்திருந்தனர்.

Wednesday, 1 January 2014

wise u happy new year to all my vk friends & ur families

Saturday, 14 December 2013

நெல்லை, வீ.கே.புதூர்-தென்காசிக்கு நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2013,01:59 IST

வீரகேரளம்புதூர்: நெல்லையிலிருந்து வீரகேரளம்புதூர், சுரண்டை, ஆய்க்குடி வழியாக தென்காசிக்கு இயக்கப்பட்ட அதிகாலை நேர பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழக தாமிரபரணி பணிமனையிலிருந்து வீரகேரளம்புதூர், சுரண்டை வழியாக தென்காசிக்கு எஸ்.எப்.எஸ்., பஸ் கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. வீரகேரளம்புதூர் வழியாக இயக்கப்பட்ட முதல் எஸ்.எப்.எஸ்., என்ற பெயரைப் பெற்று பொதுமக்களின் வரவேற்பையும் பெற்றிருந்த இந்த பஸ் அதிகாலை 5.10 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு வந்தது.இதனால் கோவையில் இருந்தும், சென்னையிலிருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் வீரகேரளம்புதூர் தாலுகாவைச் சேர்ந்த பயணிகள் பெரும் பயனடைந்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு வார காலமாக இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அதிகாலை நேர பஸ் இல்லாமல் முதியோர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்கு அடுத்ததாக இயக்கப்படும் பஸ் சரியான நேரத்திற்கு வரவில்லை எனில் சுமார் ஒன்னரை மணி நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து, நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுமென வீரகேரளம்புதூர் தாலுகா பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்