Saturday 29 June 2013

தமிழ் இலக்கியம்


தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி என பல வடிவங்கள் உள்ளன. தமிழில் வாய்மொழி இலக்கியங்களும் முக்கிய இடம் வகிக்கின்றன.
தமிழ் இலக்கியம்
சங்க இலக்கியம்
அகத்தியம் தொல்காப்பியம்
பதினெண்மேற்கணக்கு
எட்டுத்தொகை
ஐங்குறுநூறு அகநானூறு
புறநானூறு கலித்தொகை
குறுந்தொகை நற்றிணை
பரிபாடல் பதிற்றுப்பத்து
பத்துப்பாட்டு
திருமுருகாற்றுப்படை குறிஞ்சிப் பாட்டு
மலைபடுகடாம் மதுரைக் காஞ்சி
முல்லைப்பாட்டு நெடுநல்வாடை
பட்டினப் பாலை பெரும்பாணாற்றுப்படை
பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியார் நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது இனியவை நாற்பது
களவழி நாற்பது கார் நாற்பது
ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது
ஐந்திணை எழுபது திணைமாலை நூற்றைம்பது
திருக்குறள் திரிகடுகம்
ஆசாரக்கோவை பழமொழி நானூறு
சிறுபஞ்சமூலம் முதுமொழிக்காஞ்சி
ஏலாதி கைந்நிலை

Saturday 22 June 2013

வர்மக் கலை

வர்மம் – ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று...

வர்மம் ஆதித்தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று. இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிகளில் பரவி இருந்தது. இக்கலை சிதமருதுவதையைத் துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்க்கு சாட்சி.
அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்

"அகத்தியர் வர்ம திறவுகோல்"

"அகத்தியர் வர்ம கண்டி"

"அகத்தியர் ஊசி முறை வர்மம்"

"அகத்தியர் வசி வர்மம்"

"அகத்தியர் வர்ம கண்ணாடி"

"அகத்தியர் வர்ம வரிசை"

"அகத்தியர் மெய் தீண்டா கலை"

ஆகியவை குறிப்பிடத்தக்கவை

" ஜடாவர்மன் பாண்டியன்" என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.

காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் "The fighting techniques to train the body from India " என்ற பொருளை தருகின்றது.

இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் விளக்குகின்றன

உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.

நமது வர்ம கலை பரவிய நாடுகள்:

வர்மமும் கிரேக்கமும்!

கிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.

“வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.

தூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”!

இதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன(போதி தர்மர்- பின்னர் விளக்கமாக பார்க்கலாம்).

தொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.

சீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:

1. தொடு வர்மம்: இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்

2. தட்டு வர்மம்: இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்

3. நோக்கு வர்மம்: பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்

4. படு வர்மம் : நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.

உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:

தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்

நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்

உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்

முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்

கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்

கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்

கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்

கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்

கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்

இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்.

வர்மத்தின் அதிசயங்கள் !

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன் ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.

ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.

ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.

நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும். மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.

மேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். நக்கல் புரியலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்.


, தொடுவர்மத்தால் தாக்கப்பட்டவர் உடனடியாக இதன் பதிப்பை உணர மாட்டார் . இதை உணர்வதற்குள் இவருக்கு சிகிச்சை செய்தாக வேண்டும். இந்த பாதிப்பானது ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ, ஒரு மாததிலோ, அல்லது வருடக்கணக்கில் கூட இருக்கும்! படுவர்மத்தால் தாக்கப்பட்டால் சிலமணி நேரத்துக்குள் பதிப்பு உணரப்படும். இதற்கு சிகிச்சையும் இந்த காலத்திற்குள் செய்தாக வேண்டும். தட்டு வர்மம் யாருக்கும் கற்று தரப்படமாட்டாது. இது மிகவும் மோசமான பிரிவு. ஆசான் மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும். நோக்கு வர்மம் தான் அனைத்திலும் உச்சமானது யாரையும் தொடாமல் கண் பார்வையாலேயே தாக்கி உயிரிழக்க வைக்க முடியும்! உதாரனத்திற்கு சென்னையில் உட்கார்ந்து கொண்டு மதுரையில் இருப்பவரின் எல்லா நோய்களையும் குணப்படுத்தாலம் ! ஒரே சமயத்தில் எந்த ஆயுதமும் இல்லாமல் நூறு பேரை தாக்கும் வல்லமை கொண்டது இந்த கலை, ஆனால் இது யாருக்கும் கற்று தர படமாட்டாது. ஆசான் தன் மாணவன் ஒழுக்கமானவன் என முடிவு செய்தால் மட்டுமே இதை கற்காலம்.

தமிழர்களாய் பிறந்ததற்கு ஏதோ ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தான் என்க்கு தோன்றுகிறது. இப்படிப்பட்ட கலைகளை அழிய விடாமல் பாதுகாப்பது ஓவ்வொரு தமிழனின் கடமை. இனியாவது விழித்துக்கொள்வோம் !

Friday 21 June 2013

வீரகேரளம்புதூரில் புதிய பேருந்து நிலையம்

சென்னை, ஏப்.3 - ஊராட்சிப் பகுதிகளில் ரூ.16 கோடி மதிப்பில் 16 புதிய பேருந்து நிலையங்கள் உருவாக்கப்படும் என்று நகராட்சி நிர்வாக மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மான்யக் கோரிக்கையில், அமைச்சர் கே.பி.முனுசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

முதல்வரின் ஆணைப்படி, 2013-14 ஆம் ஆண்டில், மக்கள் தொகை அதிகமுள்ள ஊரகப் பகுதிகளிலும், முக்கிய சந்திப்புகளிலும், பயணிகள் நிழற்கூடம், கழிப்பறை, குடிநீர் வசதி, கடைகள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் அமையப்பெற்ற, ஒவ்வொன்றும் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 புதிய பேருந்து நிலையங்கள் 16 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் கீழ்க்கண்ட ஊராட்சிகளில் கட்டப்படும்.

கடலூர் - பெரியாகுறிச்சி, விழுப்புரம் - திருவக்கரை, கிருஷ்ணகிரி - தளி, கிருஷ்ணகிரி - சூளகிரி, தர்மபுரி - பஞ்சப்பள்ளி, ஈரோடு - லக்காபுரம், நீலகிரி - உள்ளட்டி, நாமக்கல் - ஏடப்புளிநாடு, திருப்பூர் - கோடங்கிபாளையம், கரூர் - தோகைமலை, திண்டுக்கல் - செந்துறை, இராமநாதபுரம் - ஏர்வாடி, விருதுநகர் - ஆலங்குளம், தூத்துக்குடி - தருவைக்குளம், திருநெல்வேலி - வீரகேரளம்புதூர், கன்னியாகுமரி - தடிக்காரன்கோணம்.

2012-13 ஆம் ஆண்டில், ஊரகப்பகுதிகளிலுள்ள 5,200 கி.மீ நீளமுள்ள மண் மற்றும் சரளைச் சாலைகள் அனைத்து பருவ காலத்திற்கும் ஏற்றவைகளாக மேம்படுத்த எடுத்துக்கொள்ளப்பட்டன. 2013 - 14 ஆம் ஆண்டிலும் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் 9,235 கி.மீ நீளமுள்ள மண், சரளை மற்றும் கப்பிச் சாலைகள் தார் சாலைகளாக மேம்படுத்தப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 12,524 கிராம ஊராட்சிகளிலும், 385 ஊராட்சி ஒன்றியங்களிலும் சேவை மையங்கள் கட்டப்படும். இச்சேவை மையங்களில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் பற்றிய தகவல்களும், முழு சுகாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டங்களை ஊராட்சி அளவிலும், ஊராட்சி ஒன்றிய அளவிலும் செயலாக்கம் செய்யும் அலுலகங்களும் அமையப்பெறும். முதற்கட்டமாக 2013-14-ம் ஆண்டில், தலா 10 லட்சம் ரூபாய் செலவில் 4,000 ஊராட்சி சேவை மையங்கள் மற்றும் தலா 25 லட்சம் ரூபாய் செலவில் 120 ஊராட்சி ஒன்றிய சேவை மையங்கள் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை 2023-ல் தெரிவிக்கப்பட்டுள்ள பத்து முக்கிய அம்சங்களில் ஒன்றாக ஒட்டுமொத்த குடிநீர் மற்றும் சுகாதாரச் சேவையை பூர்த்தி செய்ய வேண்டுமென முதல்வர் வலியுறுத்தியுள்ளார். மேலும், 2015-க்குள் தமிழகத்தை திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாநிலமாக மாற்ற வேண்டுமென முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

அதனடிப்படையில், 2015-ம் ஆண்டுக்குள் தமிழகத்தை திறந்து வெளி மலம் கழித்தல் அற்ற மாநிலமாக ஆக்குவதற்கு வேண்டிய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும். இந்நடவடிக்கைகளை வலுப்படுத்தும் விதமாக 2006-ம் ஆண்டு முதல் செயல்பாடற்று இருக்கும் தமிழ்நாடு சுகாதார விழிப்புணர்வு குழுமம் மீண்டும் புனரமைக்கப்படும்.

இதற்கெனத் தேவையான வலுவான நிறுவன அமைப்புகள் ஏற்படுத்தும் விதமாக மாவட்ட அளவில் குடிநீர் மற்றும் சுகாதார துணை மையங்களும், வட்டார வள மையங்களும் 2013-14 ஆம் ஆண்டில் அமைக்கப்படும். இதற்கு 11 கோடியே 89 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

முதல்வரால் டிசம்பர் 2012-ல் நடத்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களது மாநாட்டில், தேவைப்படும் மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றியங்களையும், ஊராட்சிகளையும் பிரித்து மக்கள் பயன்பெறும் வண்ணம் நடவடிக்கையெடுக்க ஆணையிட்டார். அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்திலுள்ள 35 கிராம ஊராட்சிகளை 95 கிராம ஊராட்சிகளாக மறு சீரமைக்கவும், 4 ஊராட்சி ஒன்றியங்களை 6 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கவும் ஆணையிட்டுள்ளார். அதேபோல, மக்களின் வசதிக்காகவும், நிர்வாக நலனுக்காகவும், 2013-14-ம் ஆண்டில், புதிய ஊராட்சி ஒன்றியங்கல் பின்வருமாறு ஏற்படுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கடலாடி, கமுதி மற்றும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து, சிக்கல் என்ற புதிய ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்தப்படும்.

கடலூர் மாவட்டத்திலுள்ள காட்டுமன்னார் கோயி, கீரப்பாளையம் மற்றும் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து, ஸ்ரீமுஷ்ணம் என்ற புதிய ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்தப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தளி மற்றும் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து,அஞ்செட்டி என்ற புதிய ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்தப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப் பட்டனம், பர்கூர் மற்றும் மத்தூர் ஊராட்சி ஒன்றியங்களைப் பிரித்து போச்சம்பள்ளி என்ற புதிய ஊராட்சி ஒன்றியம் ஏற்படுத்தப்படும்.

புதிய ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகள் 2016 முதல் முழு அளவில் சட்டப்படி செயல்பட ஏதுவாக கட்டடங்கள் மற்றும் ஏனைய பணிகள் தற்போது நிறைவேற்றப்படும். புதிய அலுவலகங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களும் நியமிக்கப்படுவார்கள்.

மக்கல் தொகை, வருவாய் மற்றும் நகர்ப்புறப் பகுதிகளுக்கு அருகாமை ஆகியவற்றின் அடிப்படையில் ஊராட்சிகளை வகைப்படுத்தி, அதற்கிணங்க தேவையான கூடுதல் அலுவலர்கள் மற்றும் வசதிகளை ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை அளித்திட ஓர் உயர்நிலைக்குழு அமைக்கப்படும்.

கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாவட்டங்களில், ஊராட்சி நிர்வாகத்தினை செம்மைப்படுத்தும் முயற்சியாக, 500 கிராம ஊராட்சிகளுக்கும் அதிகமாக உள்ள திருவள்ளூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம்ம ஆகிய ஏழு மாவட்டங்களில் கூடுதலாக ஒரு உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் ஒரு உதவி இயக்குநர் (தணிக்கை) ஆகியோர் நியமிக்கப்படுவர். இந்த அலுவலகங்களுக்குத் தேவையான கூடுதல் பணியாளர்களும் நியமிக்கப்படுவர்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

Monday 17 June 2013

கர்நாடக-சங்கீதம்


தமிழிசை
அடடா! என்ன அழகு!!

மார்கழி மகோற்சவம், சங்கீதக் கச்சேரி, தியாகராஜ உற்சவம் _ என்கிற பெயர்களில் சென்னை, திருவையாறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் இசைப்பருவகாலம் (Music Season) தொடங்கிவிட்டது.

சென்னையில், மியூசிக் அகாடமி, கிருஷ்ணகான சபா, நாரதகான சபா முதலான அரங்குகளில் கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் களைகட்டத் தொடங்கிவிட்டது.

அரங்குகளில் அமர்ந்து, சபாஷ்! பேஷ், பேஷ்!! ரொம்ப நன்னா இருக்கு!!! _ எனக் கூறி, தலையசைத்து, கைத்தாளம் போட்டு, சுவைத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்.

தமிழிசை மன்றம் ஒன்றில் மட்டும் தமிழிசை விழா தொடங்கி இசை நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. அது என்ன, கர்நாடக சங்கீதம்? அது என்ன, தமிழிசை? இரண்டும் ஒன்றா? வெவ்வேறா? தொடர்ந்து ஆய்வு செய்வோம்.

இசை எனப்பட்டது ஏன்?

பாடுபவனின் அல்லது கருவிகள் மூலம் ஒலி இயக்குபவனின் கருத்தும் ஓசையும் கேட்பவனின் செவியில் விழுந்து மனதில் புகுந்து, எண்ணத்தில் கலந்து உள்ளத்தை அந்த கருத்து _ ஓசையோடு இசைந்து போகச் செய்வதால் _ இசைவிக்கச் செய்வதால் இசை எனப்பட்டது. இனிமை தழுவும்போது இன்னிசை எனப்பட்டது.

இசைத்தமிழ் நாம் செய்த அரும் சாதனை!

இசையில் தமிழ் கலக்கும்போது இசைத்தமிழ் எனலாயிற்று, தமிழில் இசை இணையும்போது தமிழிசை எனப்படுகிறது. இவ்வண்ணம் அமைத்தது தமிழரின் சாதனை! தமிழில், இசைக்கலை தொல்காப்பியம், சங்ககால இலக்கியங்கள் தொடங்கி இன்றுவரை அரும்பி, மலர்ந்து வளர்ந்து வருகிறது. சங்ககாலம் தொட்டே இசைக்கு என, முறையான, நெறிப்படுத்தப்பட்ட இலக்கணம் உண்டு. இலக்கண நூல்களும் உண்டு. மொழியறிவும் இயற்கையறிவும் கொண்டு, ஏழுவகை இசைப் பெயர்களைப் பண்டைத் தமிழர் வகுத்தனர். அவை: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன.

இயற்றமிழின் உயிர் நெடில் எழுத்துகள் ஆகிய, ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகியவை ஏழிசைக்குரிய அலகு (unit) கள் என்னும் குறியீடுகளை அமைத்தனர். பின்னர், வசதி, எளிமை கருதி தமிழர்களே ச, ரி, க, ம, ப, த, நி என்ற குறியீட்டு எழுத்துகளை அவற்றிற்கு மாற்றாக வகுத்தனர். இந்த ஏழு இசைக்குறியீடுகளின் ஏற்ற, இறக்க, நிரவல்களே ஆலோசை, அமரோசை, அலுக்கல் எனப்பட்டன. நல்லவண்ணம் பண்படுத்தி, செவிக்கு இனிய ஓசையைச் செய்த (பண்ணிய)தால் இன்னிசை பண் எனும் பொதுப்பெயரால் வழங்கப்பட்டது. பண்டைக்காலத்தில் முதலில் அமைந்த பண்கள் (இராகங்கள்) _ 103; பிறகு, இவை விரிவடைந்து 11991 பண்கள் ஆயின _ என்கிறது தமிழ்ப் பண்ணாராய்ச்சி முடிபு.

பழங்காலப் பண்கள்: அய்ந்திணை அடிப்படையில் குறிஞ்சிப் பண், முல்லைப்பண், மருதப்பண், நெய்தற்பண், பாலைப்பண் என அய்ம்பெரும் பண்கள் அமைந்தன. இவற்றின் வகைப்பாடுகள் ஆகப் பல பண்கள் எழுந்தன. அவற்றில் சில பின்வருமாறு: செம்பாலைப்பண், படுமலைப்பாலைப்பண், செவ்வழிப்பண், அரும்பாலைப்பண், கோடிப்பாலைப்பண், விளரிப்பண், மேற்செம்பாலைப்பண். இவை சங்ககாலப் பண்களின் பெயர்கள். சிலப்பதிகாரக் காலத்தில், பண்கள் அடிப்படையில் அமைந்த பாடல்கள், கானல்வரி, ஊர்சூழ்வரி, வேட்டுவரி என்கிற நில அடிப்படையிலான இசைப்பாடல்கள் பாடப்பட்டன. தேவார_திருவாசக_திவ்வியப்பிரபந்த சைவ_வைணவ பக்திக்காலத்தில் (கி.பி.7_12ஆம் நூற்றாண்டு) பண்கள் புதிய பெயர்களைப் பெற்றன. அவற்றுள் சில பின்வருவன:

அவை: இந்தனம், கொல்லி, சாதாரி, தக்கேசி, பழந்தக்கம், நைவளம் அல்லது நாட்டை, யாழ்முறி. ஒரு பண்ணை, நீட்டி முழக்கி, அலுக்கி இசைக்கும் ஒலிப்புமுறை ஆளத்தி என்பதாகும். தமிழ்ப்பண் முறையில் வழங்கிய பாடல் பண்ணத்தி எனலாயிற்று.

இரு வல்லவர்கள்: தனித்தன்மை வாய்ந்த தமிழிசைக் கலையின் நுட்பம், நுண்ணிய யாழிசைப் பண் முதலிய வற்றைத் திரட்டி, பண்ணாய்வு செய்து இரு இசை வல்லவர்கள் அரிய நுல்களை வெளியிட்டுள் ளனர். ஒருநூல்: கருணா மிர்தசாகரம் என்பது. இதனை எழுதி வெளி யிட்ட இசைப் பேரறிஞர் தஞ்சை ஆபிரகாம் பண்டிதர். மற்றொரு நூல்: யாழ்நூல் என்பது இதனை எழுதியவர் அருள்திரு. விபுலானந்த அடிகள்.

விபுலானந்த அடிகள் இந்த நூலை அண்ணா மலைப் பல்கலைக்கழக அரங்கில் அரங்கேற்றம் செய்து பண்ணிசை நுட்பங்களை மக்களிடம் நேரில் விளக்கினார். அப்போது, உடனிருந்து, ஒத்துழைத்து, பண்ணி சைத்து உறுதுணை புரிந்தவர். பண்ணா ராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள். அவரோடு, பல நாள்கள் நெருங்கிப் பழகி, பல தமிழிசை நுணுக்கங்களை அவரிடமிருந்து நான் பெற்றேன்; கற்றேன். இவ்வாய்ப்பு எனக்குக் கிடைத்த பெரும்பேறு எனலாம்.

கர்நாடக சங்கீதம் மறைந்து போயிற்றே!

பண்டைய தமிழிசை களவாடப்பட்டு, சமஸ்கிருத மயம் (Sanseritation) ஆக்கப் பட்டு, கர்நாடக சங்கீதம் என அழைக்கப்படலாயிற்று. அது மெய்யாகவே, நம் தமிழிசை தான்? மராட்டிய மன்னன் சோமேசுவரன் தமிழிசையைக் கர்நாடக சங்கீதம் என அழைத்தான்; குறித்தான். தமிழிசை என்னும் வழக்காறு தடம் புரண்டு போயிற்று. கர்நாடக சங்கீதம் _ என்னும் வழக்காறு காலூன்றலாயிற்று.

மறுக்க இயலா மாபெரும் உண்மை:

கி.பி. 1210_1247இல் வாழ்ந்த காஷ்மிரியாகிய சாரங்க தேவர் என்பார், தான் எழுதிய சங்கீத ரத்னாகரம் என்னும் நூலிலே, தேவார வர்த்தினி, தட்சணாத்ய கானா, திராவிட பாஷா, தட்சண குர்ஜரி என்கின்ற வகையால் அந்த நூலிலே, செய்திகளை விளக்குகிறார். தமிழ்நாட்டு இசையையே அவர் கைக்கொண்டார்.

அவர், தமிழ்நாட்டின் பல இடங்களையும் சுற்றிப்பார்த்து, பல, தேவார இசை வகை களையும், ஒவ்வொரு கோவிலி லும் வாசிக்கப் பெறும் நாகசுர இசையையும்; பஜனை மற்றும் நாட்டுப் புறப்பாடல் முதலியவற்றையும் நன்றாகக் கேட்டறிந்தார். அவற்றின் உண்மைகள், இசையின் நுட்பம், முதலியவற்றை உளத்தில் பதித்துக் கொண்டே பின்பு சங்கீத ரத்னாகரம் என்ற நூலை எழுதினார். _ (ஆதாரம்: நூல்: இசைத்தமிழ் இலக்கண விளக்கம் _ ஆசிரியர்: வா.சு. கோமதி சங்கரய்யர்.)

எப்படி? எப்படி? மாறியது எப்படி?

கர்நாடக மன்னர்களின் தலைநகரம் விஜயநகரமாகும். அவர்களது ஆதிக்கத்தின்கீழ், இருந்த துளுவ நாடு, கோவா, ஆந்திரம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளும் கர்நாடக ராஜ்யம் என்றே அழைக்கப்பட்டன. தமிழகம், கி.பி.1500 வரை, கர்நாடக விஜயநகர சாம்ராஜ்ய மன்னர்களின் நேர்ப்பார்வையில் இருந்தது. பின்பு, மதுரையிலும், தஞ்சையிலும் விஜய நகரத்தின் பிரதிநிதிகளாக நாயக்கர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களது தாய்மொழி தெலுங்கு ஆகும். கர்நாடக சாம்ராஜ்யத்தின் காலத்தில் தமிழகத்தில் வடமொழி, கன்னட, தெலுங்குப் பாடல்கள் பெருமளவு ஏற்கப்பட்டன. 18, 19ஆம் நூற்றாண்டுகளில் மைசூர், வடஆர்க்காடு, செங்கல்பட்டுப் பகுதிகளைக் கர்நாடகா என்றே வெள்ளைக்காரர்கள் அழைத்தனர். கர்நாடக இசை என்ற பெயரும் அப்படிப்பட்டதுதான்! _ (குடந்தை என் சேதுராமன், நூல்: தமிழிசையும் கர்நாடக சங்கீதமும் -_ தமிழ்மணி, தினமணி _ 23.3.1991.)
நம் தமிழிசை களவாடப்பட்டு, கர்நாடக சங்கீதமான வரலாற்றைப் பார்ப்பனர்கள் தயக்கமோ, மயக்கமோ இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டனரே?

பெயர்களை மாற்றிய பித்தலாட்டம்

தமிழிசை ஏழு அலகுகளை ஏற்றி, இறக்கி ஒலித்த பின் பண்ணைப் பாடும் பாங்கு பண் என்பதாகும். இதனை, ஆரியப் பார்ப்பனியம் (இ)ராகம் என மாற்றியது. ச, ரி, க, ம, ப, த, நி என்னும் தமிழ்ப் பண்களின் ஏழிசை அலகு, தமிழில் சுரம் எனப்பட்டது. சுர் என்னும் ஒலிக்குறிப்பினால் இப்பெயர் பெற்றது. இதனை ஸ்வரம் என மாற்றினர் களவாணிகள். இந்த சுரங்கள் இசைப் பெயர்கள் அல்ல; இசைக் குறியீடுகள்தான்.

ஆனால், ஆரியம். ச _ ஷட்ஜம்; ரி _ ருஷபம்; க _ காந்தாரம்; ம _ மத்யமம்; ப _ பஞ்சமம்; த _ தைவதம்; நி _ நிஷாதம் _என்று ஏழிசையின் அலகுகளுக்குப் பெயர் சூட்டி, தமக்குரியதாக்கினர் களவாணிகள். இது உண்மையாயின் ஷட்ஜம் _ என்பதன் முதல் எழுத்து ஆகிய ஷ என்றுதான் இருக்க வேண்டும். ருஷபம் _ ரு _ என்றுதான் இருக்க வேண்டும். காந்தாரம் _ கா எனவும், தைவதம் _ தை எனவும் குறிக்கப்படல் வேண்டும். அவ்வாறில்லையே? ச, ரி, க_ என்றல்லவா இருக்கிறது? இந்தப் பெயர்கள் உண்மையில் ஏழிசைப்பண்கள் ஆகிய, குரல், துத்தம் முதலியவற்றின் வறட்சி வடமொழிப் பெயராக்கமே! ஆளத்தி _ ஆலாபனம் ஆனது; பண்ணத்தி கீர்த்தனை ஆனது; ச, ரி, க, ம, ப, த, நி என ஏழு சுரங்களை ஏறுமுகமாக இசைப்பது ஆரோசை எனப்படும். இறங்குமுகமாக இசைப்பது அமரோசை (ச, நி, த, ப, ம, க, ரி என) இரண்டையும் மாறிமாறி கலக்கி இசைப்பது, அலுக்கள் எனப்படும். இப்பெயர்கள், ஆரோஹணம், அவரோ---ஹணம், கமஹம் எனப் பெயர் மாற்றப்பட்டன. பண்ணை இசைக்கும் அடிப்படை ஒலி ஒலிப்பு ஆகும்; இது ஸ்தாயி என மாற்றப்பட்டது வன்மையான ஒலிப்பு, தமிழில் வலிவு, மென்மை ஒலிப்பு மெலிவு, இரண்டையும் சமனாக ஒலிப்பது சமன் என்றும் அழைக்கப்பெற்றன. இவற்றை, தாரஸ்தாயி, மந்த்ரஸ்தாயி, மத்யமஸ்தாயி _ என மாற்றினர். ச, ரி, க, ம, ப, த, நி _ என்னும் ஏழு சுரங்களும் இடம் பெறும் இசை தமிழில் பண் என்றே வழங்கப்பட்து.

இதனை, சம்பூர்ணம் என மாற்றினர். 6 சுரங்கள் கொண்டது பண்ணியல் திறம் எனத் தமிழில் வழங்கப்பட்டது ஷாடவம் என மாற்றப்பட்டது. 5 சுரங்கள் கொண்டது திறம் எனப்படும். இது அவ்டவம் என வடசொல்லாக்கினர். 4 சுரங்கள் கொண்ட திறத்திறம் என்பது சதுக்த்தம் எனப் பெயர் மாற்றப்பட்டது. வடமொழிப் பெயர்களால் வழங்கிய தமிழ்ப்பண்கள்:

தமிழ்ப்பண்களின் சில பெயர்கள் கர்நாடக சங்கீதத்தில் பின்வருமாறு மொழிமாற்றம் செய்யப்பட்டன. படுமலைப் பாலைப்பண் _ பரஹரப்ரியா, அரும்பாலைப்பண் _கல்யாணி; கொல்லிப்பண் _ சுத்தசாவேரி; இளிப்பண் _ சுத்ததன்யாசி; இந்தளப்பண் _ ஆனந்தபைரவி; என்பன அவற்றுள் சில.

அரசுப் பதிவிதழில் (Govt. Gazette) பதிவு பெறாமலே பெயர் மாற்றப்பட்டது போலும்!

செந்தமிழ்ப் பண்கள் வடமொழி ராகங்கள் ஆக்கப்பட்ட தகவலைப் பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் ஆகிய தமிழ் மன்னர் திருமங்கையாழ்வார் செந்திறத்த தமிழோசை வடசொல் ஆகி (நாலாயிரத்திவ்யப்பிரபந்தம்_ பா_2055) என்று தமது பாசுரத்தில் பாடி, உண்மையினை ஒப்புக் கொண்டுள்ளார்.



- அடுத்த இதழிலும் இசைக்கும்...

- பேராசிரியர் ந.வெற்றியழகன்

Sunday 16 June 2013

மரங்களின் அரசன் அரசமரம்

பண்டைய காலத்தில் இருந்தே நம் முன்னோர்கள் மரங்களை தெய்வமாக வழிபட்டனர். இந்துக்களின் வழிபாட்டில் வேம்பு, ஆல், அரசு என பல மரங்களுக்கு முக்கிய இடமுண்டு. அனைத்து மரங்களையும் விட அரசமரத்திற்கு தன் சிறப்பு அதிகம்.
ராஜவிருட்சம்

அரசமரத்தின் வேர் பகுதியில் பிரம்மனும், நடுவில் திருமாலும், உச்சியில் ஈசனும் அருள்புரிவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன அதனாலேயே அரசமரம் ராஜ விருட்சம் என்று அழைக்கப்படுகிறது. ‘மரங்களில் நான் அரசமரமாக இருக்கிறேன்’ என்று கீதையில் கண்ணன் கூறியிருக்கிறான். புராதான காலம் தொட்டே அரச மரம் இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதன் பூர்வீகத்தை இந்தியா, இலங்கை, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான் போன்ற நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களுடையது என்கின்றனர். ஆனால் இதன் பூர்வீகம் இந்தியாதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

போதிமரம்

அரசமரம் இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் புனித மரமாகும். புத்தபிரான் போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாக நாம் அறிவோம். அந்த போதிமரம் என்பது அரச மரம்தான். அரசுநீழலிருந்தோன் என சூடாமணி நிகண்டு கடவுட் பெயர் தொகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீண்டு நெடிய மரம், அழகான இலைகள் என்று பரந்து விரிந்து காணப்படும் அரச மரத்திற்கு அஸ்வத்தம், அச்சுவத்தம், திருமரம், போதி, கவலை, பேதி, கணவம், சராசனம், மிப்பலம் என பல பெயர்கள் உண்டு.

விஞ்ஞான உண்மை

அரசமரத்தை சுற்றினால் குழந்தை பேறுகிடைக்கும் என்பது என்பது ஒரு நம்பிக்கை. இதன் காரணமாகவே “அரசினை நம்பி புருசனை கைவிட்டாள்” என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளளது. அரசமரம் வெளியிடும் காற்றில் பெண்களின் மாதச்சுழற்சி மற்றும் அது சம்பந்தமான சுரப்பிகள் சீரடைகின்றன என்று நிரூபிக்கப்பட்டுள்ளது

‘அரச மரத்தை சுற்றிவிட்டு அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாள் ’என்ற பழமொழி உண்டு. இதன் பொருள் அரச மரம் குலம் தழைக்கச் செய்யும் பிள்ளைப் பேற்றை உண்டாக்கும். சூலகத்தை சீராக்கும். சூலகத்தில் உண்டான நோய்களை போக்கும் என்பதே. அரச மரத்தின் காற்று கருப்பை கோளாறுகளை போக்கும் தன்மையுடையது. அதுபோல் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியைக் கொடுக்கும் குணமும் இதற்கு உண்டு.

பெண்களுக்கு கர்ப்பப்பை என்ற அமைப்பு உள்ளது. பெண்ணின் ‘ ஓவரி ‘க்கு சினை முட்டைகள் வந்து சேரமுடியாவண்ணம் ‘ ஃபிலோப்பியான் ட்யூப் ‘ போன்ற உள் உறுப்பில் ஏதாவது தடை அல்லது அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம். இந்த ‘ஃபிலோப்பியான் ட்யூப் ‘க்கு அடியில் தசை வளர்ச்சி ஏற்பட்டு அதன்மூலம் அடைப்பு ஏற்பட்டும் இருக்கலாம். இத் தடையை நிவர்த்திக்கவே, பெரியோர்கள் கூறிய ஒப்பற்ற வழி அரச மரப் பிரதட்சிணம். அரச பிரதபுத்திர பாக்கியம் அடைய வேண்டுமானால், பெண்கள் அரச மரத்தைச் சுற்ற வேண்டும் என்று நம் மூதாதையர் ட்சணம் 108 முறை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்யும்போது வெறுமனே சுற்றி வராமல், ஒவ்வொரு சுற்று முடிந்ததும் , மரத்தின் அடியில் வீற்றிருக்கும் வினாயகப் பெருமான் சிலை முன்போ , அல்லது நாகர் சிலை முன்போ குனிந்து வணங்கி பஞ்சாங்க நமஸ்காரம் செய்தாக வேண்டும்.

ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பெண் இப்படி செய்து நமஸ்கரிக்கும்போது பெண்ணின் அடிவயிறு அழுத்தப்படுகின்றது. இம்மாதிரி 108 முறை அழுத்தப்படும்போது அந்த அடைப்பானது சிறிது சிறிதாக நீங்கி விடக்கூடும். அதன்பிறகு பரிபூரணமாக தடை ஏற்படுத்தும் அடைப்பு நீங்கியவுடன், சினை முட்டைகள் இப்போது எளிதாக கருப்பையைச் சென்று எளிதாகச் சேர்ந்துவிட முடியும். பிறகு புத்திர பாக்கியம் சுலபமாக ஏற்பட்டு விடும்.

இப்படிப்பட்ட உடற்பயிற்சி யோகாவில்கூட சொல்லித் தரப்படும். ஆதலின், இப்பயிற்சியை வீட்டிலேயே செய்யலாம். அரச மரத்தை ஏன் நாடிச் செல்ல வேண்டும் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? அதற்கான காரணத்தையும் விஞ்ஞான ரீதியிலேயே நாம் தெளிந்தறியலாம்.

தாவரங்களில் அதிகப்படியான பிராண வாயுவை வெளியிடும் தாவரம் அரச மரம்தான். அதற்கடுத்து வேப்பமரம். சூரிய உதயத்தில் அரச பிரதட்சிணம் செய்யும்போது இம்மரத்தடியில் ஆரோக்கியமான வகையில் காற்றோட்டம் அமைந்திருப்பதுதான். அதாவது சூரிய ஒளிக்கு முன் இம் மரத்திற்கு மேல், ‘ ஓஸோன் ‘ என்னும் காற்றழுத்த மண்டலம் ஒன்று அமையப்பெற்று , பிராண வாயுவை வெளியிடாமலும், சிதற விடாமலும், மரத்தடியில் உள்ளவர்க்கு அளிக்கின்றது. இந்த அமைப்பு சூரிய ஒளி ஏற்பட்டவுடன் சிதறி காற்றழுத்தத்தையும் சிதைத்துவிடுகின்றது.

ஆகையினால்தான் வீட்டில் கூடாது என்றும், அரச மரத்தை நாடிச் சென்று அதனைப் பிரதட்சிணம் செய்து 108 முறை முடியாவிட்டாலும், தம்மால் இயன்றவரை குனிந்து நமஸ்கரித்து வந்தால், நிச்சயம் மலட்டுத் தன்மை நீங்கப் பெற்று புத்திரப் பேற்றை அடையமுடியும் என்று நம் முன்னோர்கள் கூறிய அறிவுரை தற்கால விஞ்ஞானத்துடன் எந்த அளவுக்குப் பொருந்தி வருகிறது என்பதை நினக்கும்பொழுது வியப்படைவதுடன் , நம் முன்னோர்களின் அறிவாற்றலைக் கண்டு பூரிப்படைகிறோம். பிரதி வருடமும் ஐந்து திங்கட்கிழமைகளில் அமாவாசை வரும். இந்த தினங்கள் விஷேஷ பலனை அளிக்கும்.

அது சரி!. பிள்ளைப்பேறு பெறுவதற்கு அரசப் பிரதட்சிணம் என்றால், திருமணம் ஆகாதவர்கள் திருமணம் ஆகவேண்டும் என்று சுற்றுகிறார்களே , அதற்கு விளக்கம் என்ன என்று கேட்கலாம். திருமணம் ஆகாதவர்களுக்கும் அரச மரத்தை வலம் வருவதால், நிச்சயம் பலன் உண்டு. ஆனால், அவர்கள் 108 முறை விழுந்து வணங்கி நமஸ்கரிக்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. இந்தப் பயிற்சி புத்திர ஸ்தானம் அடைய விரும்புபவர்களுக்கே. !

பெண்களின் திருமணத்துக்கு சில தோஷங்கள் தடையாக அமைந்துள்ளன. அவைகளுள் நாக தோஷம் ஒன்றாகும். அரச மரத்தடியில் பெரும்பாலும் வினாயகர் சிலையுடன், நாக தேவதைகளின் சிலைகளும் நிறுத்தப்பட்டிருக்கும். காலையில் ஸ்நானம் முடித்து , நம்பிக்கையோடு, மரத்தை பிரதட்சிணம் வரும்போது நாகதோஷத்தின் பாதிப்பும் விலகி, சுப காரியம் இனிது நிறைவேறும்.

கருப்பை கோளாறு

அரசமரத்தின் பட்டை, வேர், விதை இவற்றை பாலில் கொதிக்கவைத்து ஆறிய பின் அதில் தேன் கலந்து தொடர்ந்து 48 நாட்கள் ( 1 மண்டலம் ) அருந்தி வந்தால் தாது விருத்தியடையும். பெண்களுக்கு கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.


அரச மரத்தின் இலையை, பட்டை, வேர், விதை இவற்றை இடித்துபொடியாக்கி வைத்துக்கொண்டு மாதவிலக்குக் காலங்களில் கஷாயம் செய்து அருந்தி வந்தால் மாதவிலக்கில் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.


பிராணவாயு

நன்கு வளர்ந்த அரச மரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக நவீன ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த பிராண வாயு காற்று மண்டலத்தில் கலந்து காலை நேரங்களில் இம்மரத்தை சுற்றி வரும்போது நாளமில்லா சுரப்பிகளில் செயல் பாடுகளைத் தூண்டுகின்றன என்றும் கூறுகின்றனர். இதன் இலை, வித்து, வேர், பட்டை அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. அதிகளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் மரங்களுள் ஒன்றான அரச மரத்தை நட்டு அதன் பயனை நாமும், நம் சந்ததியினரும் பெற வழி செய்வோம்.

அரசமரமும், வார வழிபாடும்

ஞாயிறு: ஞாயிறு அன்று அரச மரத்தை வலம் வந்து சூரியனைப் பிரார்த்தனை செய்தால் எல்லாவிதமான துன்பங்களும் விலகும்.

திங்கள்: திங்கட்கிழமை சிவபெருமானை மலர்களால் அர்ச்சித்து அரசமரத்தை வலம் வந்தால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

செவ்வாய்: செவ்வாய்க்கிழமை அன்னை உமா தேவியை அர்ச்சித்து அரச மரத்தை வலம் வந்தால் காரியசித்தி, உத்தியோக உயர்வு முதலான பல்வேறு வெற்றிகளும் எளிதில் அடையலாம்.

புதன்: புதன்கிழமை தேவகணங்களை நமஸ்கரித்து அரச மரத்தை வலம் வருபவர்களுக்கு விரும்பிய லாபங்கள் கிடைக்கும். வர்த்தகர்களுக்கு சுபிட்சம் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன்: வியாழன் அன்று தட்சிணாமூர்த்தியை அஞ்சலி செய்து அரச மரத்தை பிரதட்சிணம் செய்தால் கல்வி ஞானமும் கீர்த்தியும் பெற முடியும்.

வெள்ளி: வெள்ளிக்கிழமை லட்சுமியை நமஸ்கரித்து அரச மரத்தை வலம் வந்தால் அமோக ஐஸ்வரியமும் யோக சுபிட்சங்களும் குவியும்.

சனி: மகாவிஷ்ணுவைப் பணிந்து நைவேத்தியங்கள் செய்து அரச மரத்தை வலம் வந்தால் சர்வ துக்கமும் போகும்.

7 முறை சுற்றினால் இஷ்ட சித்தி.

9 முறை சற்றினால் ஜயம்.

11 முறை சுற்றினால் சற்குணம் உண்டாகும்.

13 முறை சுற்றினால் புத்திர பிராப்தி.

15 முறை சுற்றினால் ஆயுள் அபிவிருத்தி.

108 முறை சுற்றினால் தன பிராப்தி, தன விருத்தி.

1008 முறை சுற்றினால் அஸ்வமேத யாக பலன்