Wednesday 23 July 2014

கலிங்கப்பட்டி நாராயண சுவாமி பொன்பதி திருவிழா 11 நாட்கள் நடக்கிறது

பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜூலை 23, 2:50

சுரண்டை அருகே உள்ள கலிங்கப்பட்டி ஸ்ரீமன் நாராயணசுவாமி பொன்பதியில் 35–வது ஆண்டு திருவிழா கடந்த (18–ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. கொடியினை சுரண்டை பேரூராட்சி மன்ற தலைவர் பழனி நாடார் ஏற்றினார்.

வீரகேரளம்புதூர் ஊராட்சி தலைவர் மருதப் பாண்டியன் (எ) பாபுராஜா திருஏடு வாசிப்பும், பால்தர்மம் நடக்கிறது. 8–ம் திருவிழா அன்று 25–ந்தேதி வெள்ளி பகல் 1 மணிக்கு அன்னதர்மமும் அய்யா கருட வாகனத்தில் பவனி வருதலும் நடக்கிறது.

நிறைவு நாளான வருகிற 28–ந்தேதி இரவு 12 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதலுடன் நிறைவு பெறுகிறது.

Sunday 13 July 2014

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய திட்டத்தின்படி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 14) தொடங்கி ஜூலை 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய திட்டத்தின்படி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 14) தொடங்கி ஜூலை 21 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பாசமுத்திரம், தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் முதல்வர் ச. முத்துசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டத்தின் மூலம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 சதவீதம் இடங்களை அரசு ஒதுக்கீட்டின் கீழ், அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு இலவச பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களின் பயிற்சி செலவை அரசே ஏற்று தனியார் பயிற்சி நிலையங்களுக்கு வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

கலந்தாய்வு தொடக்கம்: அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திங்கள்கிழமை (ஜூலை 14) முதல் 21 வரை கலந்தாய்வு நடத்தி மதிப்பெண் தகுதி அடிப்படையிலும், இனவாரி அடிப்படையிலும் விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து, அவரவர் விருப்பப்படி அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கான சேர்க்கை ஆணை வழங்கப்படும். இக் கலந்தாய்வில் 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 21 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் பங்கேற்கின்றன.

திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறும் கலந்தாய்வுக்கு 8, 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 195 மாணவர், மாணவிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் எஸ்.டி. முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர், பெண்களுக்கான இன ஒதுக்கீடுகளுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல 16 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வுக்கு 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு 2814 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வில் மாணவர்கள் மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, சாதி மற்றும் வருமானச் சான்று, அரசு சேர்க்கைக் கட்டணம் ஆகியவற்றுடன் நேரில் பெற்றோர்களுடன் பங்கேற்க வேண்டும்.

பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் விடுதி வசதியும், வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உணவுடன் கூடிய இலவச விடுதியும் உள்ளது. பேட்டையில் மோட்டார் மெக்கானிக் பிரிவு மாணவர்களுக்கு 4 சக்கர வாகன பயிற்சியும், வீரகேரளம்புதூரில் 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டுநர் உரிமமும் பெற்றுத் தரப்படும். கம்பியாள், மின்சாரப் பணியாளர் பிரிவு மாணவர்களுக்கு பி- உரிமம் பெற்று வழங்கப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், மடிக்கணினி, சைக்கிள், சீருடை, ஷூ, மாதாந்திர உதவித் தொகை ரூ. 500 ம், பேருந்து, ரயில் பயணக் கட்டணச் சலுகை போன்றவை வழங்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 27 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் உள்ளன. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இடம் கிடைக்காத மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து இலவச பயிற்சி பெறலாம்.

மேலும் விவரங்களை அறிய திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநர் அலுவலக தொலைபேசி எண் 0462- 2501251, பேட்டை நிலையத் தொலைபேசி எண் 0462 - 2342005, அம்பாசமுத்திரம் நிலையத் தொலைபேசி எண் 04634 - 251108, வீரகேரளம்புதூர் நிலையத் தொலைபேசி எண் 04633 - 277962, தென்காசி நிலையத் தொலைபேசி எண் 04633 - 280933 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

Wednesday 9 July 2014

Veerakeralampudur Pincode- 627861 details


Step 1 : Select State* :Tamilnadu
Step 2 : Select District :Tirunelveli
Step 3 : Select Taluk/Taluka/Tahasil :Veerakeralampudur
Step 4 : Select City :Veerakeralampudur

Pincode : 627861
City/Town Name : Virakeralmpudur
Delivery Status: Delivery
Office Type: S.O
Division Name : Kovilpatti
Region Name : Madurai
Taluk : Veerakeralampudur
Circle Name : Tamilnadu
District Name : Tirunelveli
State Name : TAMIL NADU


Breakdown of Pincode Digits :

627861, Veerakeralampudur, TAMIL NADU, India.



6 2 7 8 6 1


Virakeralmpudur has a pincode 627861. Virakeralmpudur belongs to Veerakeralampudur Taluk (taluka) of Tirunelveli District. Virakeralmpudur belongs to Madurai region of State TAMIL NADU and has Division name Kovilpatti and circle name Tamilnadu.

PIN Code also known as Post Code, Postal Code or ZIP Code is a series of numeric digits that are assigned to geographical areas and are used for mailing purpose (especially for sorting purpose)




1st Digit : Sub-Region

The 1st digit 6 of pincode 627861 signifies that it belongs to Northern India (States that belong to Southern India, Region 6 are Kerala and Tamil Nadu). India is being divided into 9 PIN regions. The first eight regions are the geographical regions where as the 9th is reserved for the Indian Army Postal Service.



2nd Digit : Sub-Region


The Geographical Reigion digit (1st digit) plus the Second Digit i.e. 62 of the PIN Code 627861 represents the Sub Region or the Postal Circles which it belogs : i.e. TAMIL NADU.
3rd Digit : Sorting/Revenue District

The 1st,2nd and the 3rd digits all together i.e. : 627 represents the sorting or the revenue district of.

627 code belongs to division Kovilpatti in Madurai region in TAMIL NADU.
Last 3 digit : Post Office

The last three digits 861 are assigned to to individual postal offices.



VIRAKERALMPUDUR 627861 Geo-loation co-ordinates : Latitude : 8.6854000 , Longitude : 77.6146000


VIRAKERALMPUDUR, 627861 : 14-Day Weather forecast


Tuesday 8 July 2014

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சக மாணவரின் உயிரைக் காக்க களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயர் சிகிச்சை பெற்று வரும் மாணவரின் உயிரைக் காக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சுரண்டை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மனு அளித்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயர் சிகிச்சை பெற்று வரும் மாணவரின் உயிரைக் காக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சுரண்டை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், ராஜபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பி. சொக்கலிங்கபாண்டியன் (19). இவர் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்கு போதிய நிதி இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினர் தவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு நிதியுதவி அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி அக்கல்லூரியில் பயிலும் சக மாணவர், மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர், திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

Thursday 3 July 2014

சாலையோர ஆக்கிரமிப்பு, குறுகிய பாலத்தால் வீ.கே.புதூரில் போக்குவரத்து நெருக்கடி

பதிவு செய்த நேரம்:2014-07-01 11:26:06

சுரண்டை, : வீ.கே.புதூரில் சாலையோர ஆக்கிரமிப்பு மற்றும் குறுகிய பாலத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் பழைய தாலுகா அலுவலகம் மேல்புறம் மாறாந்தை கால்வாய் செல்கிறது. இந்த காலல்வாயில் உள்ள குறுகிய பாலம் கட்டப்பட்டு சுமார் 80 வருடங்களுக்கு மேல்ஆகிறது. சுரண்டையிலிருந்து வீ.கே.புதூர் வழியாக நெல்லை செல்லும் அனைத்து பஸ்சுகளும் இந்த பாலத்தை கடந்து தான் செல்கின்றன. ஆலங்குளம், கழுநீர்குளம் பகுதி பொதுமக்கள் சுரண்டைக்கு வரும் பொதுமக்கள் இந்த பாலத்தை கடந்து தான் வரவேண்டிய அவல நிலை உள்ளது.
மழைக்காலங்களில் கால்வாயில் வெள்ளம் வரும் போது பாலத்தின் மேல்பகுதியில் செல்லும், அப்போது போக்குவரத்து தடைப்படுகிறது. பாலத்தில் எதிரே, எதிரே பஸ்கள் வந்தால் விலக முடியாமல் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிக அதிர்வு ஏற்படுகிறது. பாலம் வெடிப்பு ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாலத்தை கடப்பதால் போக்குவரத்து பாதிப்பு எற்படுகிறது.
எனவே குறுகிய பாலத்தை விரிவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாஸ்மாக் கடை
அகற்றப்படுமா?
பாலத்திலிருந்து வடக்கு பழைய பஸ்-ஸ்டாப் வரையிலான இருபுறம் பலசரக்குகடைகள், டீ கடை, ஹோட்டல் வைத்திருப்பவர்கள் கடை முன்பு கூரைசாய்ப்பு வைத்தும், மரப்பெட்டிகள், சிமெண்ட் திண்ணைகள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர்.
மேலும் அருகில் டாஸ்மாக் கடை இருப்பதால் குடிமகன்கள் நடுரோட்டில் செல்வதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகள் மற்றும் டாஸ்மாக் கடையை அகற்றினால் ஓரளவு போக்குவரத்து சீராகும்.