Wednesday 23 July 2014

கலிங்கப்பட்டி நாராயண சுவாமி பொன்பதி திருவிழா 11 நாட்கள் நடக்கிறது

பதிவு செய்த நாள் : புதன்கிழமை, ஜூலை 23, 2:50

சுரண்டை அருகே உள்ள கலிங்கப்பட்டி ஸ்ரீமன் நாராயணசுவாமி பொன்பதியில் 35–வது ஆண்டு திருவிழா கடந்த (18–ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. கொடியினை சுரண்டை பேரூராட்சி மன்ற தலைவர் பழனி நாடார் ஏற்றினார்.

வீரகேரளம்புதூர் ஊராட்சி தலைவர் மருதப் பாண்டியன் (எ) பாபுராஜா திருஏடு வாசிப்பும், பால்தர்மம் நடக்கிறது. 8–ம் திருவிழா அன்று 25–ந்தேதி வெள்ளி பகல் 1 மணிக்கு அன்னதர்மமும் அய்யா கருட வாகனத்தில் பவனி வருதலும் நடக்கிறது.

நிறைவு நாளான வருகிற 28–ந்தேதி இரவு 12 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதலுடன் நிறைவு பெறுகிறது.

No comments:

Post a Comment