Thursday 3 July 2014

சாலையோர ஆக்கிரமிப்பு, குறுகிய பாலத்தால் வீ.கே.புதூரில் போக்குவரத்து நெருக்கடி

பதிவு செய்த நேரம்:2014-07-01 11:26:06

சுரண்டை, : வீ.கே.புதூரில் சாலையோர ஆக்கிரமிப்பு மற்றும் குறுகிய பாலத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
சுரண்டை அருகே வீரகேரளம்புதூரில் பழைய தாலுகா அலுவலகம் மேல்புறம் மாறாந்தை கால்வாய் செல்கிறது. இந்த காலல்வாயில் உள்ள குறுகிய பாலம் கட்டப்பட்டு சுமார் 80 வருடங்களுக்கு மேல்ஆகிறது. சுரண்டையிலிருந்து வீ.கே.புதூர் வழியாக நெல்லை செல்லும் அனைத்து பஸ்சுகளும் இந்த பாலத்தை கடந்து தான் செல்கின்றன. ஆலங்குளம், கழுநீர்குளம் பகுதி பொதுமக்கள் சுரண்டைக்கு வரும் பொதுமக்கள் இந்த பாலத்தை கடந்து தான் வரவேண்டிய அவல நிலை உள்ளது.
மழைக்காலங்களில் கால்வாயில் வெள்ளம் வரும் போது பாலத்தின் மேல்பகுதியில் செல்லும், அப்போது போக்குவரத்து தடைப்படுகிறது. பாலத்தில் எதிரே, எதிரே பஸ்கள் வந்தால் விலக முடியாமல் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. பாலத்தில் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிக அதிர்வு ஏற்படுகிறது. பாலம் வெடிப்பு ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. காலை, மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாலத்தை கடப்பதால் போக்குவரத்து பாதிப்பு எற்படுகிறது.
எனவே குறுகிய பாலத்தை விரிவுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டாஸ்மாக் கடை
அகற்றப்படுமா?
பாலத்திலிருந்து வடக்கு பழைய பஸ்-ஸ்டாப் வரையிலான இருபுறம் பலசரக்குகடைகள், டீ கடை, ஹோட்டல் வைத்திருப்பவர்கள் கடை முன்பு கூரைசாய்ப்பு வைத்தும், மரப்பெட்டிகள், சிமெண்ட் திண்ணைகள் கட்டி ஆக்கிரமித்துள்ளனர்.
மேலும் அருகில் டாஸ்மாக் கடை இருப்பதால் குடிமகன்கள் நடுரோட்டில் செல்வதாலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகள் மற்றும் டாஸ்மாக் கடையை அகற்றினால் ஓரளவு போக்குவரத்து சீராகும்.

No comments:

Post a Comment