Tuesday 8 July 2014

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சக மாணவரின் உயிரைக் காக்க களமிறங்கிய கல்லூரி மாணவர்கள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயர் சிகிச்சை பெற்று வரும் மாணவரின் உயிரைக் காக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சுரண்டை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மனு அளித்தனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயர் சிகிச்சை பெற்று வரும் மாணவரின் உயிரைக் காக்க அரசு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் சுரண்டை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், ராஜபாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பி. சொக்கலிங்கபாண்டியன் (19). இவர் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து புற்றுநோய் சிறப்பு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், அவருக்கு உயர் சிகிச்சை அளிப்பதற்கு போதிய நிதி இல்லாத நிலையில் அவரது குடும்பத்தினர் தவிக்கின்றனர். எனவே, தமிழக அரசு நிதியுதவி அளித்து அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என வலியுறுத்தி அக்கல்லூரியில் பயிலும் சக மாணவர், மாணவிகள் 50-க்கும் மேற்பட்டோர், திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

No comments:

Post a Comment