Friday 29 August 2014

தண்ணீர் என நினைத்து பூச்சிமருந்தை குடித்த காவலாளி சாவு

சுரண்டை, ஆக. 28–

ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு பூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முப்பிடாதிமுத்து (வயது 58). இவர் வீரகேரளம்புதூர் பகுதியில் உள்ள பல்லாரி தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர் தோட்டத்தில் படுத்து இருக்கும்போது தண்ணீர் தாகம் எடுத்தது. அப்போது அங்கு பாட்டிலில் பல்லாரிக்கு அடிக்கும் பூச்சி மருந்து இருந்துள்ளது. அதை தண்ணீர் என்று நினைத்து முப்பிடாதிமுத்து குடித்து விட்டார்.

பாதி அளவு குடித்த பிறகுதான், அது தண்ணீர் அல்ல என்று அவருக்கு தெரியவந்தது. உடனடியாக அவர் அருகில் உள்ளவர்களிடம் கூறினார். அவர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று முப்பிடாதிமுத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment