Sunday 26 March 2017

நம் ஊர்களின் பெயர்களும் அதற்கான காரணங்களும்.

நம் ஊர்களின் பெயர்களும் அதற்கான காரணங்களும்.

இப்படியும் இருக்கலாம் என்று என் சிந்தனையில் உதித்தவை.

வீரகேரளம்புதூர்- வீரகேரளனின் புதிய ஊர் அல்லது வீரமாய் கேரளாவைப் போல செழிப்பான புதிய ஊர்.

கழனீர்குளம்- வயல்வெளிகள் சூழ்ந்த்க் குளம் அல்லது செங்குவலைப் பூக்கள் நிறைந்த குளம்.

அத்தியூத்து- அத்தி மரத்தில் நீர் ஊற்று வந்த இடம்.

ஊற்றுமலை- ஊற்று நீர் மலை உள்ள இடம் அல்லது நீர் ஊற்று உள்ள மலை.

வீராணம்- வீர ஆண் இனம் அல்லது வீர ஆ இனம்.

திருநெல்வேலி-நெல்வயல்களை வேலியாக உடைய ஊர்.

அம்பாசமுத்திரம் -மரகதவல்லி அம்பாள் பெயரால் அம்மை மற்றும் பெரிய ஏரிகள் சமுத்திரம் என்றும் சேர்த்து அம்பாசமுத்திரம்.

பாபநாசம்-பாபம் நாசம் ஆகும் இடம்.

விக்கிரமசிங்கபுரம் -விக்கிரமசிங்கன் இடம்.

சுரண்டை- சுரர் அண்டிய இடம்.- அசுரர்களுக்குப் பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த இடம்.

சாம்பவர்வடகரை-அகத்திஷ்வரர்சாம்பவமுர்த்தி- சாம்பவமுர்த்தி கோவிலுக்கும் அனுமன் நதிக்கும் வடகரையில் அமைந்த இடம்.

சுந்தரபாண்டியபுரம்-சுந்தரபாண்டியன் இடம்.

வேலாயுதபுரம்- வேல் ஆயுத இடம்- வேல் ஆயுதம் கொண்டவர்களின் இடம்.

ஊர்மேனிஅழகியான்- அழகிய உருவம் உடைய ஊர்.

கடையநல்லூர்- கடையன்+ நல்லூர் -இளையவனின் நல்ல ஊர்.

வாசுதேவநல்லூர்-வாசுதேவனின் நல்ல ஊர்.

சிவகிரி- சிவன் மலை.

ஆய்க்குடி- ஆயர்கள் குடும்பம் அல்லது ஆயர்கள் வாழிடம்.

தென்காசி-தென் திசையில் உள்ள காசி அல்லது தெற்கே உள்ள காசி.

செங்கோட்டை- செங்கற்களால் கட்டப்பட்ட கோட்டை.

திருமலைக்கோவில்- சிறப்பு மிகுந்த மலைக் கோவில் அல்லது மரியாதைக்குரிய மலை கோவில்.
அழகனின்(முருகன்) மலை கோவில்.

பண்பொழி -பைம்பொழில்-பசுமையான சோலைகள் நிறைந்த இடம்.

வடகரை- அனுமன் நதிக்கு வடகரையில் அமைந்த இடம்.

No comments:

Post a Comment