Sunday 8 April 2018

வீரகேரளம்புதூரை வளங்கொழிக்க செய்யும் அனுமன் நதி

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் செங்கோட்டை தாலுக்காவின் பண்பொழி, மேக்கரை அருகே உற்பத்தி ஆகும் நதி அனுமன் நதி ஆகும் .
தாமிரபரணியின் வடக்கு கடைக்குட்டி கிளைநதி அனுமன் நதி. தென்காசியில் உற்பத்தியாகும் சிற்றாறு என்னும் ஆற்றின் துணை ஆறு ஆகும்.அனுமன் நதி மூலம் தென்காசி நகராட்சியில் உள்ள 4046.94 எக்டேர்களுக்கு நேரடியாகவும், இதன் துணையாறான கருப்பா நதி மூலம் 3844.59 எக்டேர்களுக்கு மறைமுகமாகவும் பாசன வசதி கிடைக்கிறது. இது வீரகேரளம்புதூர் என்னும் ஊரில் சிற்றாறுடன் இணைகிறது. இது 14 அணைக்கட்டுகளை கொண்டுள்ளது.


அனுமன் நதி வரலாறு

இராமாயண காலத்தின் போது இராமன், இலட்சுமணனுடன் வந்த அவர்களின் படையின் தாகத்தைத் தணிக்க அனுமான் ஒரு பாறையை உடைத்தான். அதில் இருந்து விண்கங்கை கொட்டியது. அதுவே நாளடைவில் ஆறாக மாறி அனுமன் ஆறு எனப் பெயர் பெற்றதாகக் கூறுவர்.

அல்லது

ஸ்ரீராமர் பதினாறு ஆண்டு வனவாச காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தண்ணீர் தாகம் எடுக்கவே ஸ்ரீஆஞ்சநேயர் தனது வாலால் மலையில் அடித்த இடத்தில் தோன்றியது தான் அனுமன் நதி ஆகும்

அனுமன் நதி அருகில் உள்ள ஊர்கள்:

பண்பொழி- பைம்பொழில்-பசுமையான சோலைகள் நிறைந்த இடத்தின் வழியாகவும். அனுமன் நதிக்கு வடகரையில் அமைந்த வடகரை வழியாகவும்.இலவையம்பதி என்ற இலத்தூர் வழியாக வந்து துணையாறான கருப்பா நதியுடன், காசி தர்மம் அருகே உள்ள நெடுவயல் என்னும் ஊரில் இணைகிறது. பின்பு ஆயர்கள் குடும்பம் அல்லது ஆயர்கள் வாழிடமான ஆய்க்குடி வழியாகவும். அகத்திஷ்வரர்சாம்பவமுர்த்தி- சாம்பவமுர்த்தி கோவிலுக்கும் அனுமன் நதிக்கும் வடகரையில் அமைந்த சாம்பவர்வடகரை வழியாகவும்.சுரர் அண்டிய இடம்.- அசுரர்களுக்குப் பயந்து தேவர்கள் தஞ்சமடைந்த சுரண்டை வழியாக வந்து வீரகேரளனின் புதிய ஊர் அல்லது வீரமாய் கேரளாவைப் போல செழிப்பான புதிய ஊரான -வீரகேரளம்புதூரில் சிற்றாறுடன் இணைகிறது.

அடவி நயினார் அணை தேக்கம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் செங்கோட்டை தாலுக்காவின் பண்பொழி, மேக்கரை அருகே அனுமன் நதி ஆற்றின் குறுக்கே அடவி நயினார் அணை அமைந்துள்ளது.

அணையின் உயரம் : 51.5 m
அணையின் கொள்ளளவு : 4.927 Mcum
அணையின் நீளம் :670 m
அணையின் நீர்ப்பிடிப்பு பரப்பளவு : 15.54 km2



இந்நதி செங்கோட்டை , தென்காசி மற்றும் வீரகேரளம்புதூர் தாலுக்காவின் நீர்ப்பாசனத்திற்கு தேவையான நீரை தருகிறது.நமது ஊரிலுள்ள அருந்தாபிரட்டிக்குளம்,கோவில் குளம் மற்றும் குறு குளத்திற்கு தேவையான நீரை அனுமன் நதி மற்றும் கருப்பா நதி தருகிறது.


No comments:

Post a Comment