Sunday 1 December 2013

வீரகேரளம்புதூர் சவேரியார் ஆலய திருவிழா துவக்கம்

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.பாளை. மறைமாவட்டத்தில் பிரசித்திபெற்ற வீரகேரளம்புதூர் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குத்தந்தை வர்க்கீஸ் திருப்பலி நிறைவேற்றி, கொடியேற்றினார். அருட்தந்தைகள் மைக்கேல் ராஜ், வியாகப்பராஜ் முன்னிலை வகித்தனர். முன்னதாக ஊர்த்தலைவர் சேசுராஜன் தலைமையில் இறைமக்கள் பங்குத்தந்தைக்கு முதல் மரியாதை அளித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.கொடியேற்ற நிகழ்ச்சியைத் தொடர்ந்து தினமும் மாலையில் திருப்பலி, மறையுரை வழங்கப்படுகிறது.இன்று (28ம் தேதி) புதுவாழ்வு தியாகனக்குழுவினரின் தியானமும், 30ம் தேதி இரவு ஆர்.சி.துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் வீரை இளையோர் மற்றும் அன்பியங்கள் இணைந்து வழங்கும் கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.வரும் டிசம்பர் 1ம் தேதி மாலை 6 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது. 2ம் தேதி இரவு 9 மணிக்கு புனிதரின் திருவுருவ தேர்ப்பவனி நடக்கிறது. 3ம் தேதி காலை 8 மணிக்கு திருவிழா கூட்டுத்திருப்பலியும், புதுநன்மை விழாவும் நடைபெறுகிறது.ஏற்பாடுகளை தலைவர் சேசுராஜன் தலைமையில் செயலாளர் மரியசுந்தரம், பொருளாளர் அருளானந்தம், உறுப்பினர்கள் சேசு, ஆரோக்கியராஜ், மிக்கேல், ஞானசாமி, ராயப்பன் மற்றும் அருட்சகோதரிகள், இறைமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment