Saturday 14 December 2013

நெல்லை, வீ.கே.புதூர்-தென்காசிக்கு நிறுத்தப்பட்ட பஸ்சை இயக்க வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : டிசம்பர் 14,2013,01:59 IST

வீரகேரளம்புதூர்: நெல்லையிலிருந்து வீரகேரளம்புதூர், சுரண்டை, ஆய்க்குடி வழியாக தென்காசிக்கு இயக்கப்பட்ட அதிகாலை நேர பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழக தாமிரபரணி பணிமனையிலிருந்து வீரகேரளம்புதூர், சுரண்டை வழியாக தென்காசிக்கு எஸ்.எப்.எஸ்., பஸ் கடந்த நான்கு ஆண்டுகளாக இயக்கப்பட்டு வந்தது. வீரகேரளம்புதூர் வழியாக இயக்கப்பட்ட முதல் எஸ்.எப்.எஸ்., என்ற பெயரைப் பெற்று பொதுமக்களின் வரவேற்பையும் பெற்றிருந்த இந்த பஸ் அதிகாலை 5.10 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு வந்தது.இதனால் கோவையில் இருந்தும், சென்னையிலிருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் வீரகேரளம்புதூர் தாலுகாவைச் சேர்ந்த பயணிகள் பெரும் பயனடைந்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு வார காலமாக இந்த பஸ் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் அதிகாலை நேர பஸ் இல்லாமல் முதியோர்கள், பெண்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதற்கு அடுத்ததாக இயக்கப்படும் பஸ் சரியான நேரத்திற்கு வரவில்லை எனில் சுமார் ஒன்னரை மணி நேரம் பஸ் ஸ்டாண்டில் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து, நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுமென வீரகேரளம்புதூர் தாலுகா பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment