Tuesday 25 March 2014

வீ.கே.புதூரில் மின்வாரிய ஊழியரை மிரட்டியவர் மீது வழக்கு

பதிவு செய்த நேரம்:2014-03-25 10:30:32
சுரண்டை, : வீ.கே.புதூர் மின்வாரியத்தில் பெண் உதவியாளரை மிரட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சுரண்டை அருகே வீ.கே.புதூரை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் பரசுராமன்(52). வீகேபுதூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவர் வீகேபுதூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றார்.
அங்கு பணியில் இருந்த உதவியாளர் கழுநீர்குளத்தை சேர்ந்த மாரிச்சாமி மனைவி முருகேஸ்வரி(32) என்பவரிடம், புதிய மின் இணைப்பு பெறுவதற்கான விவரங்களை கேட்டுள்ளார். அதற்கு அவர், அதிகாரி இல்லை. எனக்கு அதுபற்றிய விவரம் தெரியாது என்று கூறியுள்ளார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த பரசுராமன், முருகேஸ்வரியை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக வீ.கே.புதூர் போலீசார் பரசுராமன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment