Friday 9 May 2014

கோடை மழையால் 8 ஆண்டுகளுக்கு பிறகு சிற்றாற்றில் அணை கடந்து வெள்ளம் புரண்டது

பதிவு செய்த நேரம்:2014-05-09 11:49:36
நெல்லை, : நெல்லை மாவட்டத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு வெளுத்து வாங்கிய கோடை மழை யால் சிற்றாற்றில் அணை களை கடந்து வெள்ளம் புரள்கிறது. குளங்கள் நிரம்பி வருகின்றன. விவசாயிகள் சாகுபடிக்கு தயாராகி விட்டனர்.
குற்றாலத்தில் உருவா கும் சிற்றாறு சுரண்டை புளியரை அணையை கடந்து வீராணம் வருகிறது. அதன்பின் அனுமன்நதியோடு கலந்து கங்கைகொண்டான், சீவலப்பேரி வரை வந்து தாமிரபரணி யில் சங்கமிக்கிறது.
குற்றாலம் தாண்டி தென்காசி, வீகே.புதூர், சுரண்டை பகுதி வரை அணைகள், குளங்கள் அதி கம் என்பதால் சுரண்டை யை கடந்து தண்ணீர் வருவது கடந்த காலத்தில் குறைந்து விட்டது. குறிப் பாக வீராணம் அணையை உயர்த்தியபிறகு தண்ணீர் வடிவதே கடினமானது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவான புயலால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்வதால் இப்பகுதியில் தண்ணீர் ஓடுகிறது. வீ.கே.புதூர், பைம்பொழில், அச்சன்புதூர், சுரண்டை வரை பல்லாரி சாகுபடி பெருமளவில் நடப்பதால் புளியரை அணையின் ஷட் டர் திறக்கப்பட்டு தண்ணீர் சிற்றாற்றை சார்ந்த குளங்களுக்கு செல்கிறது. வீரா ணம் கடந்து ஆற்றிலும் தண்ணீர் புரண்டோடுகிறது.
ஆயிரக்கணக்கான விவசாயிகள் நம்பியிருக்கும் மானூர் பெரியகுளத்திலும் கொஞ்சம் நீர் பெருகியுள் ளது. இக்குளத்துக்கு முன் புள்ள தெற்குப்பட் டியை சேர்ந்த 2குளங்கள், ஐயர் குளம், ஐயனார்குளம், மடத் தூர் குளங்கள் பெருகி வருகின்றன. இதேநிலை இன் னும் சில நாட்கள் நீடித்தால் மானூர் குளமும் ஓரளவு நிரம்பிவிடும்.
இதுகுறித்து மானூர் பெரியகுளம் விவசாயி முகமது இப்ராகிம் கூறுகை யில், ‘துத்திக்குளம், மாயமான்குறிச்சி, ஐயனார்குளம், மடத்துக்குளங்கள் நிரம்பி வருவதால் எங்கள் குளத்துக்கு நீர் வரத்து உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் தாயார்தோப்புக்கு கிழக்கே தண்ணீர் வருவதே இந்த கோடையில்தான். இன்னும் சில நாட்கள் மழை இருந்தால் சிற்றாற்றை தழுவியுள்ள 28 குளங்களும் நிரம்பிவிடும். விவசாயிகள் பருத்தி, நெல், கத்தரி என ஏதாவது ஒரு பயிரை சாகுபடி செய்யத் தொடங்கி விடுவர்.’ என்றார்.
மேல பிள்ளையார்குளம் விவசாயி சுடலை கூறுகையில், ‘கோடை மழை இன்னும் இரு நாட்கள் பெய்தால் மேல, கீழ பிள்ளையார்குளங்கள் முழுமையாக நிரம்பிவிடும். நாங்கள் விவசாயத்துக்கு தயாராகிவிட்டோம். கையிலிருந்த கொஞ்ச காசையும் கோடையில் கால்நடைகளை காப்பாற்ற செலவழித்து விட்டோம்’ என்றார்.
சபாஷ் சத்தியநாதன் மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் வர அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் சத்தியநாதனும் ஒரு காரணம் என்றனர் விவசாயிகள். தாயார்தோப்பிலிருந்து மானூர் குளம் வரை சுமார் 30 கி.மீ. கால்வாயை இவர் சத்தமின்றி செப்பனிட்டுள்ளார். இன்னும் சுமார் 6 கி.மீ. தூரமே இப்பணி பாக்கி உள்ளது.

No comments:

Post a Comment