Saturday 10 May 2014

வீரகேரளம்புதூர் புனித அந்தோணியார் பெண்கள் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

பதிவு செய்த நேரம்:2014-05-10 11:19:37

வீரகேரளம்புதூர் புனித அந்தோணி யார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 134 மாணவிகள் பிளஸ்2 தேர்வு எழுதியினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இது 100 சதவீத தேர்ச்சியாகும். மாணவி விக்னேஸ்வரி 1163 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவி கலை வாணி 1140 மதிப்பெண்கள் பெற்று 2வது இடத்தையும், மாணவி ரோஜா பர்வீன் 1136 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பெற்றனர். முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவி களை பள்ளி நிர்வாகி மேரிடெய்சி ராஜம்மாள், தலைமை ஆசிரியை காளியம்மாள் மற்றும் ஆசிரியர் கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

No comments:

Post a Comment