Sunday 1 June 2014

பேட்டை ஐ.டி.ஐ.யில் முப்பெரும் விழா

: May 30, 2014 5:26 AM
பேட்டையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) முப்பெரும் விழா நடைபெற்றது.

பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துநர், கடைசலர், இயந்திரவேலையாள் ஆகிய 8 தொழிற்பிரிவுகளில் மாணவர்-மாணவிகள் பயின்று வருகிறார்கள். இந்த நிலையத்தின் வளாகத்தில் அமைந்துள்ள தொடர் அறிவுரை மையத்தில் 98 ஆம் ஆண்டு அகில இந்திய அளவிலான தேர்வில் மோட்டார் மெக்கானிக் பிரிவு மாணவர் எஸ்.மணிகண்டன் முதல் இடத்திலும், 99 ஆம் ஆண்டு தேர்வில் கம்பியாளர் பிரிவு மாணவி சி.பாரதி முதலிடமும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் மத்திய அரசால் வழங்கப்பட உள்ளது.

இதேபோல வீ.கே.புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் கம்பியாள் பிரிவு மாணவி எஸ்.பேச்சியம்மாள், மாநில அளவிலான திறனாய்வுப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். இவருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர வளாகத் தேர்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்-மாணவிகளுக்கு பணிநியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.

இதற்கான முப்பெரும் விழாவுக்கு, பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் எஸ்.முத்துசாமி தலைமை வகித்தார். பயிற்சி அலுவலர் என்.ரமீசாபானு வரவேற்றார். திருநெல்வேலி மண்டல பயிற்சி இணை இயக்குநர் டி.ஜான் பாஸ்கோ முன்னிலை வகித்தார். நிர்வாக அலுவலர் ஆ.வள்ளியம்மாள் பாராட்டிப் பேசினார். பயிற்சி அலுவலர்கள் சத்யராஜ், லட்சுமணன், ஜெயச்சந்திரன், முத்தையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment