Saturday 21 June 2014

ஊராட்சித் தலைவி கணவர் மீது தாக்குதல்

• Last Updated: Jun 19, 2014 12:40 AM
வீரகேரளம்புதூர் அருகே திருமண வீட்டுக்கு குடிநீர் வழங்கும் பிரச்னையில் ஊராட்சித் தலைவியின் கணவர் தாக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து பதற்றம் நிலவியது.
இதையடுத்து போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பிரச்னை சுமூகமாக தீர்க்கப்பட்டது. வீரகேரளம்புதூர் அருகேயுள்ள கழுநீர்க்குளம் ஊராட்சித் தலைவர் சண்முகத்தாய். இவரது கணவர் ஆண்டபெருமாள். செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் திருமண வீடு ஒன்றுக்கு ஊராட்சி குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடிப்பது தொடர்பான பிரச்னையில் ஆண்டபெருமாள் தாக்கப்பட்டதாக தகவல் பரவியது. ஏற்கெனவே இருதரப்பினரிடையே கடந்த சில ஆண்டுகளாக பிரச்னை இருந்து வரும் நிலையில் இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவியது. இதையடுத்து புதன்கிழமை காலையில் சுரண்டை ஆய்வாளர் டேவிட் ரவிராஜன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
பின்னர் ஆலங்குளம் டி.எஸ்.பி.பிச்சை தலைமையில் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக தீர்வு ஏற்படவே பதற்றம் தணிந்தது. அங்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment