Saturday 21 June 2014

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க விண்ணப்பிக்கலாம் 30–ந் தேதி கடைசி நாள்

புதன், ஜூன் 18,2014, 10:04 AM IST

நெல்லை,
பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் படிக்க 30–ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு முதல்வர் எஸ்.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.
தொழிற்பயிற்சி
பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், பொருத்துனர், கடைசலர், இயந்திர வேலையாள், கம்பியாள், கம்மியர் மோட்டார் வண்டி, கம்மியர் வானொலி மற்றும் தொலைக்காட்சி, பற்றவைப்பவர், திறன்மிகுமையம் (எலக்ட்ரிக்கல்) போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வீரகேரளம்புதூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், பொருத்துனர், மின்சாரப்பணியாளர், கம்பியாள், பம்ப் மெக்கானிக் போன்ற பிரிவுகளும், அம்பை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர், மின்சாரப்பணியாளர், கம்பியர் மின் அணுவியல் பிரிவுகளும், தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொருத்துனர், மின்சாரப்பணியாளர், கம்பியாள் போன்ற தொழிற்பிரிவுகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்ற அனைத்து மாணவ– மாணவிகளுக்கும் வளாக தேர்வு மூலம் வேலைவாய்ப்பு வழங்குவதுடன், மின்சார பணியாள், கம்பியாள் போன்ற தொழிற்பிரிவு மாணவ– மாணவிகளுக்கும் ‘பி‘ லைசென்ஸ் பெற்று தரப்படுகிறது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்று வரும் மாணவ– மாணவிகளுக்கு இலவச லேப்– டாப், சைக்கிள், சீருடை, ஷூ, மாதம் ரூ.500 ஊக்கத்தொகை, பஸ் பாஸ் போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி
பொருத்துனர், கடைசலர், இயந்திர வேலையாள், மெக்கானிக் மோட்டார் வண்டி, கம்பியர் வானொலி மற்றும் தொலைக்காட்சி, திறன்மிகு மையம் (எலக்ட்ரிக்கல்), பம்ப் மெக்கானிக் மற்றும் கம்பியர் மின் அணுவியல் போன்ற தொழிற் பிரிவுகளில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவ– மாணவிகள் சேரலாம். கம்பியாள் வெல்டர் போன்ற பிரிவுகளில் சேர 8–ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10–ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்கள் சேரலாம். இருபாலரும் தகுதியுடையவர்கள்.
கம்பியர் மோட்டார் வண்டி தொழிற் பிரிவில் சேர்ந்த ஆண், பெண் பயிற்சியாளர்களுக்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
வீரகேரளம்புதூர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் அனைத்து மாணவ– மாணவிகளுக்கும் ஓட்டுனர் பயிற்சி கொடுத்து 2 மற்றும் 4 சக்கர வாகன உரிமம் (லைட்) சான்றிதழ் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இயங்கி வரும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதியும், வீரகேரளம்புதூர் அரசினர் தொழிற்பியிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்களுக்கு அரசு விடுதியில் உணவு வசதியுடன், இலவச தங்கும் வசதி வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அலுவலகத்தில் ரூ.50 செலுத்தி விண்ணப்பமும், விளக்க உறையும் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். வருகிற 30–ந் தேதி கடைசி நாளாகும். மதிப்பெண் அடிப்படையிலும், இன சுழற்சி மூலமாகவும் மாணவ– மாணவிகள் சேர்க்கை தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
குறைந்தபட்ச கல்வி தகுதியுடன் 14 வயது பூர்த்தி செய்த மாணவ– மாணவிகள், 40 வயது வரை உள்ளவர்கள் சேர்க்கைக்கு தகுதி உடையவர்கள்.
வளாக தேர்வு
பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை மற்றும் தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று மாணவ– மாணவிகளுக்கும் வளாக தேர்வு மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது. பலர் வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று உள்ளனர். மேற்கண்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் விண்ணப்பம் பெற்று சேர்ந்து பயனடையலாம்.
விவரங்களுக்கு
பேட்டை தொழிற்பயிற்சி நிலையத்தில் 0462 2342005 என்ற தொலைபேசி எண்ணிலும், வீரகேரளம்புதூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 04633 277962 என்ற தொலைபேசி எண்ணிலும், அம்பை தொழிற்பயிற்சி நிலையத்தில் 04634 251108 என்ற தொலைபேசி எண்ணிலும், தென்காசி தொழிற்பயிற்சி நிலையத்தில் 04633 280933 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு நெல்லை, மண்டல பயிற்சி இணை இயக்குனர் அலுவலகம் 0462 2501251, 2501261 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் மாலை நேர இலவச பயிற்சிகள் திறன் மேம்பாட்டுக்காக பல்வேறு தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தகவலை, பேட்டை, வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் ஒருங்கிணைந்த முதல்வர் எஸ்.முத்துசாமி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment