Saturday 29 November 2014

கடையநல்லூர் புதிய ஐடிஐயில் மாணவர் சேர்க்கை

நெல்லை, : கடையநல்லூரில் நடப்பு கல்வி ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வீரகேரளம்புதூர், அம்பை, தென்காசி, பேட்டை ஆகிய தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் வழங்கப்படுகிறது. பொருத்துனர், மின்பணியாளர், கம்பியர் மோட்டார் வண்டி, கம்பியாள், பற்றவைப்பவர் ஆகிய கல்விக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்சிவிடி பாடத்திட்டத்தின்கீழ் சேர்க்கப்படும் மாணவர்கள் அனைவருக் கும் இலவச சைக்கிள், லேப்டாப், சீருடை, பஸ் பாஸ் உள்ளிட்டவை மற்றும் உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.50 ஆகும். மேலும் விபரங்களுக்கு பேட்டை ஐடிஐ முதல்வரை 0462 2342005 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 5ம் தேதி ஆகும்

No comments:

Post a Comment