Saturday 29 November 2014

வீரகேரளம்புதூர் சவேரியார் ஆலய திருவிழா

பதிவு செய்த நேரம்:2014-11-27 10:53:34

வீரகேரளம்புதூர் புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் மாலை யில் 2ம் தேதி வரை திருப்பலி, கூட்டுத்திருப்பலி, மறைக்கல்வி, அன்பியங்கள், நற் செய்தி தியானம் மற்றும் ஒப்புரவு வழிபாடு, விவிலியப் போட்டிகள் நற்கருணைப்பவனி நடக்கிறது.
டிச.2ம் தேதி இரவு 9 மணியளவில் புனிதரின் சப்பர பவனி நடக்கிறது. நிறைவு நாளான 3ம் தேதி திருவிழா திருப்பலி, புதுநன்மை, கொடியிறக்கம் நடைபெறுகிறது. விழாவில் தூத்துக்குடி மறை மாவட்ட சிப்பிக்குளம் ராஜா ரொட் ரிகோ, கோவில்பட்டி உதவி பங்குதந்தை, ஆரோக்கிய ராஜ், பாவூர்சத்திரம் ஆரோக்கியராஜ், சுரண்டை பங்குத்தந்தை வர்க்கீஸ் திருப்பலி நடத்துகிறார்கள். ஏற்பாடுகளை ஊர் தலை வர் சேசுராஜன், செயலாளர் மரியசுந்தரம், பொருளாளர் அருளானந்தம், உறுப்பினர் கள் ராயப்பன், ஞானசாமி அருள் சகோதரிகள் இறைமக்கள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment