Thursday 18 December 2014

திருமலைக்கோவில்-வீ.கே.புதூர்-நெல்லை வழித்தடத்தில் பஸ் தொடக்க விழா


செவ்வாய் 16, டிசம்பர் 2014 4:52:02 PM (IST)
திருமலைக்கோவிலில் இருந்து பண்பொழி, கம்பிளி, விந்தன்கோட்டை, சுந்தரபாண்டியபுரம், சுரண்டை, வீ.கே.புதூர், ஆலங்குளம் வழியாக நெல்லை செல்ல புதிய வழித்தடத்தில் (தடம் எண்.101) அரசு பஸ் தொடக்க விழா சுரண்டை அருகே சுந்தரபாண்டியபுரத்தில் நடந்தது.

மாவட்ட ஆட்சியர் கருணாகரன் தலைமை வகித்தார். மாவட்ட அதிமுக துணை செயலாளர் மூர்த்தி, பொருளாளர் சண்முக சுந்தரம், எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் கரையாளனூர் சண்முகவேலு, கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் பண்டாரம் வரவேற்றார். அமைச்சர் செந்தூர்பாண்டியன் புதிய வழித்தடத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் யூனியன் தலைவர்கள் செல்லம்மாள் பால்ராஜா, செல்வ மோகன்தாஸ் பாண்டியன், பேரூராட்சி துணைத் தலைவர் பாலமுருகன், சுப்பிரமணியன், மேலபாட்டாகுறிச்சி ஊராட்சி தலைவர் பண்டாரிநாதன், மாநில போக்குவரத்து துணை செயலாளர் கந்தசாமிபாண்டியன், மண்டல தலைவர் இளவரசு, துணைசெயலாளர் குத்தாலிங்கம், அமைப்பாளர் வேல்முருகன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment