Saturday 20 December 2014

நெல்லை மாவட்டத்தில் நாளை 70 ஆயிரம் பேர் குரூப் 4 தேர்வு எழுதுகின்றனர் கண்காணிக்க 21 பறக்கும் படைகள்

பதிவு செய்த நேரம்:2014-12-20 09:56:50

நெல்லை,: நெல்லை மாவட்டத்தில் நாளை (21ம் தேதி) நடக்கும் குரூப் 4 தேர்வை 69 ஆயிரத்து 792 பேர் எழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்க 21 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் நாளை நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, பாளை, ராதாபுரம், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி, வள்ளியூர், வீ.கே.புதூர் ஆகிய 12 இடங்களில் 228 மையங்களில் குரூப் 4 தேர்வு நடக்கிறது. இந்தத் தேர்வை 69 ஆயிரத்து 792 பேர் எழுதுகின்றனர்.
நெல்லையில் 25 மையங்களில் 6 ஆயிரத்து 494 பேரும், ஆலங்குளத்தில் 11 மையங்களில் 3 ஆயிரத்து 31 பேரும், அம்பையில் 30 மையங்களில் 7 ஆயிரத்து 439 பேரும், நாங்குநேரியில் 5 மையங்களில் 1,221 பேரும், பாளையங்கோட்டையில் 58 மையங்களில் 17 ஆயிரத்து 291 பேரும், ராதாபுரத்தில் 4 மையங்களில் 895 பேரும், சங்கரன்கோவிலில் 46 மையங்களில் 10 ஆயிரத்து 331 பேரும், செங்கோட்டையில் 14 மையங்களில் 2 ஆயிரத்து 915 பேரும், சிவகிரியில் 18 மையங்களில் 4 ஆயிரத்து 572 பேரும், தென்காசியில் 42 மையங்களில் 10 ஆயிரத்து 519 பேரும், வள்ளியூரில் 11 மையங்களில் 2 ஆயிரத்து 853 பேரும், வீ.கே.புதூரில் 10 மையங்களில் 2 ஆயிரத்து 229 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
இந்த தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்வுக் கூட முதன்மை கண்காணிப்பாளர்களுடன் மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேல் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், தேர்வை கண்காணிக்க துணை கலெக்டர்கள் தலைமையில் 21 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர தாசில்தார்கள், பிடிஒக்கள், துணை தாசில்தார்கள் நிலையில் 56 சுற்றுக்குழுக்களும், துணை பிடிஒக்கள், உதவியாளர்கள் நிலையில் 274 ஆய்வுப் பணி அலுவலர்களும் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் அனைத்திலும் போதிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சீனிவாசன், செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர்கள் சிவாஜி, சண்முகம், பிரேம் மனோகர் வில்லியம்ஸ், உதவி பிரிவு அலுவலர்கள் பெருமாள், பால தண்டாயுதம், சத்தியராஜ் மற்றும வருவாய் துறை, போக்குவரத்து துறை, கருவூலத் துறை, மின்சாரத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment