Saturday 14 July 2018

வீ.கே.புதூர் அரண்மனையில் டாஸ்மாக் மது ஆறாக ஓடுதாம்


‘‘அல்வா மாவட்டத்துல என்ன விசேஷம்’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இது சாதாரண ஆறு இல்ல... சாராய ஆறு... நெல்லையின் வரலாற்றுச் சின்னமாக இருக்கும் வீ.கே.புதூர் அரண்மனையில் டாஸ்மாக் மது ஆறாக ஓடுதாம்... ஊத்துமலை மன்னர் இருதாலய மருதப்ப பாண்டியனார் தமிழ் வளர்த்த இந்த அரண்மனை மதுக்கடையாக மாறி விட்டது வரலாற்று ஆய்வர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே கட்டிடம் ஸ்டிராங்க் இல்லைனு இதற்கு முன்பு இருந்த கலெக்டர் நிராகரித்த பைல் எங்கே போச்சுனே தெரியல... கலெக்டர் மாறிய பிறகு நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த பைலை தூசி தட்டி எப்படியோ தற்போது கடையை திறந்து விட்டனர். இந்த அரண்மனையின் அருகில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலும் உள்ளதாம். வழிபாட்டு தலம் அருகில் மதுக்கடை இருக்கக் கூடாது, ஸ்திரத்தன்மை இல்லாத கட்டிடம் என விதிமுறைகளை மீறி அங்கு மதுக்கடை திறந்து இருக்காங்களாம்... இதனால பக்தர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் ரொம்பவே அப்செட்ல இருக்காங்களாம்...’’ என்று சொல்லிவிட்டு எழுந்தார் விக்கியானந்தா.

No comments:

Post a Comment