Tuesday 17 September 2013

வீ.கே.புதூரில் வருவாய்துறையினரை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூரில் வருவாய்த்துறையினரைக் கண்டித்து பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அம்மா திட்ட முகாம்களில் வாங்கிய அனைத்து மனுக்களுக்கும் உடனடியாக தீர்வு அளிக்காத வருவாய்த்துறையைக் கண்டித்து வீரகேரளம்புதூரில் ஆலங்குளம் மற்றும் கீழப்பாவூர் ஒன்றிய பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தொழிற்பிரிவு தலைவர் சுடலையாண்டி தலைமை வகித்தார். ஆலங்குளம் ஒன்றிய தலைவர் டாக்டர் அன்புராஜ், கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன், விவசாய அணி மாடசாமி முன்னிலை வகித்தனர். சின்னதம்பி வரவேற்றார். வருவாய்த்துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.

மாவட்ட செயலாளர் ரத்னராஜ், கோட்ட பொறுப்பாளர் அன்புராஜ், அமைப்பு சாரா பிரிவு தலைவர் கலைராஜா, மணி, ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் செல்லையாதேவர், நகர தலைவர்கள் தங்கராஜ், சுரண்டை சங்கரநாராயணன், ஊத்துமலை தாமரை மாடசாமி, குட்டி என்ற மாடசாமி, தென்காசி கந்தசாமி, மேலநீலிதநல்லூர் ராமலிங்கம், பொன்னுதுரை மற்றும் ஏராளமான பா.ஜ., தொண்டர்கள் கலந்து கொண்டனர். வீரகேரளம்புதூர் நகர தலைவர் சிவனனைந்த பெருமாள் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment