Wednesday 4 September 2013

பள்ளிவாசல் காம்பவுண்ட் சுவரை உயர்த்தி கட்ட அனுமதி கோரி உள்ளிருப்பு போராட்டம்

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 04,2013,04:35 IST

வீரகேரளம்புதூர் : வீரகேரளம்புதூர் அருகிலுள்ள கழுநீர்குளம் கிராமத்தில் பள்ளிவாசல் காம்பவுண்ட் சுவரை உயர்த்திக் கட்ட அனுமதிக்கக் கோரி முஸ்லிம்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கழுநீர்குளத்தில் காட்டுபாவா ஜூம்மா ம‹தி உள்ளது. இதன் காம்பவுண்ட் சுவர் கட்டுவதில் முஸ்லிம் சமுதாயத்திற்கும், மற்றொரு பிரிவினருக்கும் நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் மீண்டும் காம்பவுண்ட் சுவரை உயர்த்திக் கட்ட முஸ்லிம்கள் முயற்சித்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் ‹ழ்நிலை நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். தென்காசி ஆர்.டி.ஓ., ரமேஷ் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. அதில் 2003ம் ஆண்டு கோர்ட் தீர்ப்பின்படி நடப்பது என முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுவர் கட்டும் பணியைத் தொடர முஸ்லிம்கள் ஏற்பாடு செய்தனர். இதனை மற்ற பிரிவினர் தடுத்தனர். இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். காம்பவுண்ட் சுவர் கட்டும் பணி நிறுத்தப்பட்டதால், முஸ்லிம் சமுதாயத்தினர் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையில் தென்காசி ஆர்.டி.ஓ., ரமேஷ் தலைமையில் மீணடும் சமாதானக் கூட்டம் நடந்தது. இதில் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருப்பதால், தீர்ப்பு வரும் வரை சுவரை கட்ட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனை அனைவரும் ஏற்றுக் கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மேலும் பிரச்னை ஏற்படாமலிருக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆலங்குளம் டி.எஸ்.பி., லயோலா இக்னேசியஸ், தாசில்தார் ரதி லெட்சுமி மற்றும் அதிகாரிகள் கழுநீர்குளத்தில் முகாமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment