Saturday 17 August 2013

வீரகேரளம்புதூர் அருகே இரு தரப்பினர் மீண்டும் மோதல்

பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 11, 5:58 PM IST

ஆலங்குளத்தை அடுத்த வீரகேரளம்புதூர் அருகே உள்ளது கழுநீர்குளம் கிராமம். இங்கு இரு பிரிவு மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியைச் சேர்ந்த ஆண்டபெருமாள் மனைவி இசக்கியம்மாள் கடந்த வாரம் இறந்தார். அவரது உடலை ஒரு தரப்பினர் வசிக்கும் தெரு வழியாக எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ரோட்டில் திரண்டனர். எதிர்தரப்பினரும் ரோட்டில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சு நடத்தினர். இந்த பிரச்சினை தொடர்பாக நாளை மறுநாள் அதிகாரிகள் சமரச கூட்டம் நடத்த உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை கழுநீர் குளம் கீழதெருவை சேர்ந்த முத்தையா என்பவர் இறந்துவிட்டார். அவரது உடலையும் பிரச்சினைக்குரிய இடத்தின் வழியே கொண்டு செல்ல சிலர் திட்டமிட்டதாக தெரிகிறது. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

ஏ.டி.எஸ்.பி மகேந்திரன் தலைமையில் ஆலங்குளம் டி.எஸ்.பி லயோலா இக்னேசியஸ், இன்ஸ்பெக்டர்கள் ஆலங்குளம் சுரேஷ்குமார்,பாவூர்சத்திரம் விஜயகுமார்,சுரண்டை ஜமால்,வீரகேரளம்புதூர் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் 150க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

கலவரம் ஏற்பட்டால் தடுக்க வஜ்ரா வாகனம் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment