Wednesday 7 August 2013

வீரகேரளம்புதூர் அருகே இறந்தவரின் உடலை எடுத்து செல்வதில் பிரச்னை ஆலங்குளம் டிஎஸ்பி., சமரச பேச்சுவார்த்தை

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2013,06:55 IST
கருத்தை பதிவு செய்ய
வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் அருகேயுள்ள கழுநீர்குளம் கிராமத்தில் இறந்தவரின் உடலை எடுத்து செல்வதில் இரு சமயத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அனைத்து சமயத்தினரும் இணக்கமாக வாழ்ந்து வரும் கழுநீர்குளத்தில் பள்ளிவாசலுக்கு சுற்றுச் சுவர் கட்டுவதில் முஸ்லிம் மற்றும் இந்துக்களிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த ஆண்டபெருமாள் மனைவி இசக்கியம்மாள் நேற்று இறந்துவிட்டார். இவரது உடலை முஸ்லிம் தெரு வழியாக எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர். வழக்கமாக இறந்தவர்களை எடுத்துச்செல்லும் தெருவை விட்டு முஸ்லிம் தெருவழியே எடுத்துச்சென்றதாகக் கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ரோட்டில் திரண்டனர்.

இதனைத்தொடர்ந்து எதிர்தரப்பினரும் ரோட்டில் திரண்டனர். தகவலறிந்து ஆலங்குளம் டி.எஸ்.பி., லயோலா இக்னேஷியஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், வீரகேரளம்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீஸ் படைகுவிக்கப்பட்டது. போலீசார் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதனால் கழுநீர்குளத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் பிரச்னை ஏற்படாமலிருக்க கழுநீர்குளத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment