Monday 29 July 2013

வீரகேரளம்புதூரில் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

வீரகேரளம்புதூரில் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடந்தது.கீழப்பாவூர் வட்டாரத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றுத்திறனுடைய மாணவர்களின் உள்ளடங்கிய கல்வித்திட்டத்தின் சார்பாக மாற்றுத்திறனுடைய மாணவர்களைப் பள்ளியில் சேர்த்தல் விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாற்றுத்திறனுடைய மாணவர்களை பள்ளியில் சேர்த்தல், சமஉரிமை அளித்தல் உள்ளடங்கிய கல்வி அளித்தல், சமுதாயத்தோடு இணைத்தல், பல வாசங்கள் உள்ள அட்டைகளைப் கையில் பிடித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணி மேற்பார்வையாளர் ரோஸ்வனஜா செல்வி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
தலைமை ஆசிரியர் கோஸ்முகைதீன் முன்னிலை வகித்தார். கீழப்பாவூர் வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், பேரணியை வழிநடத்தி சென்றனர். ரமேஷ் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment