Sunday 7 July 2013

ஆலங்குளம், வீ.கே.புதூர், சுரண்டை வழியாக நெல்லை- சங்கரன்கோவில் இடையே புதிய ரெயில் பாதை ஆய்வுக்கு டெண்டர்

நெல்லை,மே.4-2013

நெல்லையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஆலங்குளம், வீ.கே.புதூர், சுரண்டை, சேர்ந்தமரம், வீரசிகாமணி வழியாக புதிய ரெயில்பாதை அமைக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு ஆலங்குளம், சுரண்டை சுற்றுப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து ரெயில் பாதை அமைப்பதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது. அதன்படி நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் வரை 160 கி.மீ. தூரத்திற்கு புதிய ரெயில் பாதை அமைப்பதற்கான ஆய்வு பணிகளுக்கு ரூ.2 லட்சத்து 47 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரெயில்வே அதிகாரிகள் இந்த பகுதியை எங்கெங்கு ரெயில் நிலையம் அமைக்கலாம், பாலங்கள் அமைக்க வேண்டிய இடங்கள், கேட் அமைக்ககூடிய பகுதிகள் இவற்றுக்கான செலவு தொகை எவ்வளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

இந்த ஆய்வின் முடிவில் அறிக்கை தயாரித்து ரெயில்வே துறைக்கு அனுப்பப்படும். இதன்பிறகு ரெயில் பாதை அமைப்பது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கட்டுமான செலவினங்கள் குறித்து இந்த அறிக்கையின் அடிப்படையில் பல கோடி மதிப்பில் ரெயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரெயில்வே வாரியம் மற்றும் ரெயில்வே திட்டக்குழு இதுபற்றிய இறுதி முடிவை அறிவிக்கும்.

இதே போல் செட்டிகுளத்தில் இருந்து நாகர்கோவில் வழியாக ஆளூர் வரை செல்லும் புதிய ரெயில் பாதை திட்டத்திற்கும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. 24 கி.மீ. தூரம் அமையவுள்ள இந்த ரெயில் பாதை ஆய்வுக்கு ரூ.37 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரு பகுதிகளிலும் ஆய்வு பணியை ரெயில்வே அதிகாரிகள் விரைவில் தொடங்க உள்ளனர்.

ரயில்வே வாரியம் மற்றும் திட்டக்குழு ஒரு புதிய ரயில் பாதை திட்டத்தை பல கோடி ரூபாய் முதலீட்டில் செயல்படுத்தும்போது, அதன் மூலம் ஆண்டுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை மையமாக கொண்டு திட்டத்தை அறிவிப்பர். குறைவான வருமானம் வரும் திட்டங்களை கைவிட்டுவிடுவர்‘‘ என்றனர்.நெல்லை& தூத்துக்குடி கடற்கரை பகுதிகளில் கிழக்கு கடற்கரை ரயில்பாதை திட்டத்துக்காக கடந்த 2007&08ம் ஆண்டுகளில் சர்வே செய்யப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அத்திட்டத்திற்கு இன்று வரை ரயில்வே துறை அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment