Tuesday 2 July 2013

வீ.கே.புதூரில் காங்.,நிர்வாகிகள் கூட்டம்

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூரில் காங்., கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட காங்., பொதுச்செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். நகரத் தலைவர் நயினார், கவுரவத்தலைவர் துரைராஜ்தேவர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அண்ணாமலை செட்டியார் வரவேற்றார். அகில இந்திய தேசிய காங்., துணைத்தலைவர் ராகுலின் பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடவும், மத்திய அரசின் சாதனைகளை விளக்க பொதுக்கூட்டம் நடத்திடவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொருளாளர் முருகன், துணைச் செயலாளர் நவநீதன், வெள்ளத்துரை, மெக்கேல்தேவர் உட்பட காங்., செயல் வீரர்கள் கலந்து கொண்டனர். குரு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment