Sunday 21 July 2013

வீ.கே.புதூர் பகுதியில் புதிய தமிழகம் சார்பில் கோரிக்கை மனு பெறுதல்

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013,05:59 IST

வீரகேரளம்புதூர்:புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வீரகேரளம்புதூர் தாலுகா பகுதியில் கட்சிக் கொடியேற்றி கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ.,யும் புதிய தமிழகம் கட்சித் தலைவருமான கிருஷ்ணசாமி, வீரகேரளம்புதூர் தாலுகாவில் சுற்றுப்பயணம் செய்து கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். மாவலியூத்து, கீழக்கலங்கல், மேலக்கலங்கல், கருப்பினான்குளம், குறிச்சாம்பட்டி, ஊத்துமலை, ருக்மணியாபுரம், தட்டப்பாறை, கண்ணாடிகுளம், முத்தம்மாள்புரம், வீராணம் ஆகிய கிராமங்களில் கொடியேற்றி வைத்தார். கண்ணாடிக்குளம் கிராமத்திற்கு சாலை வசதி வேண்டியும், நிறுத்தப்பட்ட 45டி பஸ்ஸை மீண்டும் இயக்கக் கோரியும் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார்.அவருடன் மாவட்டச் செயலாளர் அரவிந்த், மாநில இளைஞரணி செயலாளர் வக்கீல் பாஸ்கர், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், ஆலங்குளம் நகர செயலாளர் வெட்டும் பெருமாள், தென்காசி தொகுதி செயலாளர் மூர்த்தி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுரேஷ், கிளைச் செயலாளர் வீராணம் பால்பாண்டி, கணேசன், கண்ணாடிகுளம் மாடசாமி, ஊத்துமலை கோபால் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment