Friday 19 July 2013

வீரகேரளம்புதூர் தாலுகா மேலமருதப்பபுரத்தில் மனுநீதி நாள் முகாம்

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2013,06:02 IST

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் தாலுகா மேலமருதப்பபுரத்தில் மனுநீதி நாள் முகாம் நடந்தது.

முகாமிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, சமூகப்பாதுகாப்புத் திட்ட தனிதுணை ஆட்சியர் தியாகராஜன், மேலமருதப்பபுரம் பஞ்., தலைவர் ராமலிங்கத்தாய் பரமையாமுன்னிலை வகித்தனர். வீரகேரளம்புதூர் தாசில்தார் குருச்சந்திரன் வரவேற்றார். முகாமில் கடந்த மாதம் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்கப்பட்டது. 147 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களும் பெற்றக்கொள்ளப்பட்டன.

முகாமில் ஊத்துமலை நீர்வடி பகுதி சங்கத்தலைவர் பரமையா, மண்டல துணை தாசில்தார் செல்வக்குமார், வட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன், பலபத்திரராமபுரம் பஞ்., தலைவர் வள்ளி, ஆலங்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமிசுந்தரி மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சமூக பாதுகாப்பத் திட்ட தாசில்தார் சுப்பிரமணியன் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சிவசங்கரன், மணிகண்டன் உதவியாளர்கள் தங்கம், மங்களம் செய்தனர்.

No comments:

Post a Comment