Thursday 29 August 2013

வீரகேரளம்புதூர் ஸ்ரீ உச்சி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2013,06:37 IST

வீரகேரளம்புதூர்:வீரகேரளம்புதூர் ஸ்ரீ உச்சி மாகாளி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது.

வீரகேரளம்புதூர் சேனைத் தலைவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் கோவில் கொடை விழா கடந்த 2ம் தேதி காலை 8 மணிக்கு கால் நாட்டு விழாவுடன் துவங்கியது. அன்று இரவு 8 மணிக்கு கும்மிப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. 23ம் தேதி மாலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாட்டுக்குழு தேதி மாலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாட்டுக்குழு மற்றும் விவேகானந்தா நற்பணி மன்றத்தில் சார்பில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது. இரவில் கும்மிப்பாட்டு மற்றும் கோலாட்டம் நிகழ்ச்சி நடந்தது. 24ம் தேதி மாலை 6 மணிக்கு அம்மனுக்கு வருஷாபிஷேகம் நடந்தது. நண்பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கடந்த கல்வியாண்டில் 10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற வீரகேரளம்புதூர் சேனைத் தலைவர் சமுதாய மாணவ, மாணவியருக்கு பாராட்டும், பரிசும் வழங்கப்பட்டது. இரவு 10 மணிக்கு அம்மனுக்கு முழுக்காப்பு சாத்தி தீபாராதனை நடந்தது.

28ம் தேதி காலை 9 மணிக்கு சமுதாய மண்டபத்திலிருந்து பால்குடம், கன்னியாகுமரி தீர்த்தம் எடுத்து ஊர்பவனி வரும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு பால், தீர்த்த அபிசேகங்களுடன் தீப ஆராதனையும், சிறப்புப் பூஜைகளும் நடந்தன. இரவு 9 மணிக்கு பக்தர்கள் விரதமிருந்து அக்னி சட்டி ஏந்தி ஊர்பவனி வந்து காணிக்கை செலுத்தினர். இரவு 12 மணிக்கு அம்மன் சிங்க வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் வழங்கினார். தொடர்ந்து கிடாய் காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மறுநாள் காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டும், முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பக்தர்கள் முளைப்பாரியும் ஊர்வலம் வந்து அதனை ஆற்றில் கரைத்தனர். விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரங்களும், ஆராதனையும், பூஜைகளும் நடந்தன. விழா ஏற்பாடுகளை வீ.கே.புதூர் சேனைத் தலைவர் சமுதாயத்தினர் செய்தனர்.

No comments:

Post a Comment