Thursday 25 July 2013

அண்ணாமலை ரெட்டியார் ஒரு சிலேடைப் புலி.

லட்சுமியின் விருப்பத்துக்குரிய மலர்களில் சாமந்தியும்
ஒன்று.
செவ்வந்தி என்றும் சிவந்தி என்றும் செவந்தி என்றும்
இதனை அழைப்பார்கள்.
மஞ்சள் நிறமான சாமந்தி மிகவும் விசேஷமானது.
இதிலேயே பொன்னிறமான வகையும் உண்டு. அதைத்
தங்கச் சிவந்தி என்பார்கள். 'துலுக்கஞ் செவந்தி' என்றும் அதற்குப்
பெயருண்டு. ஏன் அந்தப் பெயர் என்பது சரியாகத் தெரியவில்லை.

இந்த இடத்தில் ஒரு கதையை உங்களுக்கு
சொல்லாவிடில் ஜென்ம சாபல்யம் ஏற்படாது.
காவடிச் சிந்து பாடல்களை முதன்முதலில் இயற்றியவர்
சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார்.
ஊற்றுமலை இருதயாலய மருதப்ப தேவர் என்னும்
குறுநில மன்னர் அவரை ஆதரித்து வந்தார்.
மன்னரின் மனைவியை ரெட்டியார் 'தங்கச்சி' என்றே
உரிமையுடன் அழைப்பது வழக்கம்.
ஒரு முறை அரசவையில் புலவர் கூட்டத்தின் மத்தியில்
தமிழாராய்ந்து கொண்டிருந்த வேளையில் அரசி அங்கு வந்தார்.
ரெட்டியார் மிகவும் பாசத்துடன், "தங்கச்சி வந்தியா"
என்று வரவேற்றார்.
தென்பாண்டி நாட்டில் வருகிறவர்களை "வாருங்கள்"
என்று வரவேற்பதை விட "வந்தியளா" என்று சொல்லி
வரவேற்பதுதான் பெரும்பாலும் வழக்கம். சிவகங்கைச் சீமையில்
"வந்தீஹளா?" என்று சற்று நீட்டி முழக்கிச் சொல்வார்கள்.
அதே மரபுப்படி ரெட்டியாரும் அரசியை வரவேற்றார்.
ஆனால் அவையில் இவ்வாறு ராணியுடன் உறவு முறை
கொண்டாடியது அரசருக்குப் பிடிக்கவில்லை.
அவருடைய அதிருப்தி அவருடைய முகத்தில் தெரிந்தது.
உடனே அண்ணாமலை ரெட்டியார், "அரசியார் கூந்தலில்
சூடியிருப்பது தங்கச் சிவந்தியா?" என்று கேட்டேன்.
வேறொன்றுமில்லை" என்று சமாளித்தார்.
அண்ணாமலை ரெட்டியார் ஒரு சிலேடைப் புலி.

வீடுகளில் தங்கச் சிவந்தியை வைத்திருப்பதும் அதைக்
கொண்டு லட்சுமியைப் பூஜிப்பதும் மிகவும் நல்லது.
அரச குலத்தினர் மிகவும் விருப்பமுடன் சூடும் மலராக
இது விளங்கியது.

1 comment: